தமிழகத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!
ஏப்ரல் மாதத்தில் அடுத்தடுத்து வர உள்ள நாட்களில் வார இறுதி விடுமுறை நாட்கள், அரசு பொது விடுமுறை நாட்கள் என 8 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு விடுமுறை:
கடந்த மார்ச் மாத இறுதியில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. முன்னதாக வங்கிகளில் வார இறுதி விடுமுறை, அரசு பொது விடுமுறை என மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத துவக்கத்தில் 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த தொடர் விடுமுறைகள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த விடுமுறைகள் முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி முதல் வங்கிகள் மீண்டுமாக செயல்பட துவங்கியது.
TN Job “FB Group” Join Now
தற்போது நடந்து கொண்டிருக்கும் ஏப்ரல் மாதத்தில் இன்னும் 18 நாட்கள் மீதமுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு இன்னும் 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 15 ஆம் தேதி பெங்காலி புத்தாண்டு, கேரளா புத்தாண்டு என ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரிசையாக விடுமுறைகள் வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்காக தமிழகத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
ஏப்ரல் 16ஆம் தேதி போஹாக் பிஹூ, ஏப்ரல் 21 ராம நவமி என்பதால் அன்று வங்கிகள் மூடப்பட்டிருக்கும். தொடர்ந்து ஏப்ரல் 24ஆம் தேதி 4 ஆவது சனிக்கிழமையாதலால் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஏப்ரல் 18, 25 ஆகிய தினங்கள் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறையால் இந்த மாதத்தில் இன்னும் 8 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த விடுமுறைகளுக்கேற்ப வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளை விரைந்து செயல்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.