நடமாடும் பள்ளிகள் தொடங்க திட்டம்- மாநகராட்சி அறிவிப்பு!!
கர்நாடக மாநிலத்தில், பெங்களூரு மாநகராட்சி சார்பில் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாததால் நடமாடும் பள்ளிகள் திறக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
நடமாடும் பள்ளிகள்:
பெங்களூரு மாநகராட்சி சார்பில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள், முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் தற்போது உள்ள சூழ்நிலையில் திறக்கப்பட மாட்டாது. அவ்வாறு திறந்தாலும் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப தயாராக இல்லை.
இந்நிலையில் மாணவர்கள் சிலர் தங்களது பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பெற்றோர்களுக்கு உதவியாக வேலை செய்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெங்களூரு மாநகராட்சி சார்பில் நடமாடும் பள்ளிகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.
சீருடை இல்லாத காரணத்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை – மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம்!!
இதற்காக லட்சக்கணக்கான கி.மீ, இயக்கப்பட்ட பழைய பஸ்களை, பி.எம்.டி.சி.,யிடம் இருந்து வாங்கி அதனை நடமாடும் பள்ளிகளாக மாற்ற திட்டமிட்டு வருகிறது. இதற்காக, பத்து பஸ்களை வழங்கும்படி, பி.எம்.டி.சி.,யிடம் கேட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சிக்கு ரூ.4 லட்சம் வரை தேவைப்படுகிறது. இந்த பஸ்கள் செயல்படுத்தப்பட்ட பின் மாணவர்கள் தங்களது பகுதிகளில் வரும் பேருந்துகளில் அமர்ந்து பாடங்களை கவனிக்கலாம்.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் – முதல்வருக்கு கோரிக்கை!!
முதல்கட்டமாக எந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளார்களோ, அந்த பகுதிக்கு என்று மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும். குறிப்பாக குடிசைப்பகுதிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, செல்லும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்