ஆகஸ்ட் 5 வரை முழு ஊரடங்கு அமல் – பங்களாதேஷ் அரசு அறிவிப்பு!

0
ஆகஸ்ட் 5 வரை முழு ஊரடங்கு அமல் - பங்களாதேஷ் அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 5 வரை முழு ஊரடங்கு அமல் - பங்களாதேஷ் அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 5 வரை முழு ஊரடங்கு அமல் – பங்களாதேஷ் அரசு அறிவிப்பு!

இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் நாளை (ஜூலை 22) முதல் அடுத்த 14 நாட்களுக்கு கடுமையான முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஊரடங்கு அமல்:

பங்களாதேஷ் நாட்டில் கொரோனா 2 ஆம் அலை பாதிப்பானது தற்போது உயர்ந்து வருகிறது. அதனால் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வகை கட்டுப்பாடுகளை இன்று (ஜூலை 22) முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அதாவது 2 வாரத்திற்கு மேலும் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளின் போது அனைத்து அலுவலகங்கள், தொழில்கள், ஆடை நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் 30% குறைப்பு – ஹரியானா அரசு அறிவிப்பு!

அந்த வகையில் பங்களாதேஷ் சாலைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்கும் பணிகளில் நாட்டின் எல்லை காவல்துறை மற்றும் இராணுவம் ஈடுபட்டுள்ளது. முன்னதாக அந்நாடு முழுவதும் நேற்று (ஜூலை 21) ஒரு நாளில் 7,614 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 173 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,36,503 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 18,498 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதார இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பங்களாதேஷ் முழுவதும் 24,979 கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. தவிர 9,704 பேர் சிகிச்சையில் இருந்து குணமாகியுள்ளனர். இதன் மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 961,044 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!