இளநிலை, முதுநிலை தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைப்பு – பல்கலை துணைவேந்தர் அறிவிப்பு!!
பெங்களூர் நகரில் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களுக்கான தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக பெங்களூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ஆர்.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு:
கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பொதுத்தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 7ம் தேதி தொடங்க இருந்த பெங்களூர் பல்கலைக்கழக தேர்வுகள் ஆர்டிசி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஏப்ரல் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் – ஆசிரியர்களுக்கு பயிற்சி!!
மீண்டும் ஒத்திவைப்பு:
தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு அதிக அளவில் இருப்பதால் பெங்களூர் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ஆர்.வேணுகோபால் அறிவித்துள்ளார். முன்னதாக கர்நாடகா மாநில துணை முதல்வர் சி.என்.அஸ்வந்த் அவர்கள் உயர்கல்வி தேர்வுகள் குறிப்பிட்ட தேதியில் கண்டிப்பாக நடக்கும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் தேர்வுகள்:
ஏப்ரல் 12ம் தேதி அன்று உயர்கல்வி அமைச்சர் அவர்கள் மாணவர்களின் ஆன்லைன் தேர்வு கோரிக்கைக்கு, “அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போதுள்ள கொரோனா சூழலில் ஆன்லைன் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை” என்று பதிலளித்தார். நாடு முழுவதும் ஏப்ரல் 18ம் தேதி நடக்க இருந்த முதுநிலை நீட் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்