பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) ரசிகர்கள் கவனத்திற்கு – முகமது சிராஜ் பதிவு செய்த மோசமான சாதனை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 15வது சீசனில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை தற்போது பதிவு செய்துள்ளார்.
முகமது சிராஜ்
நடப்பு IPL சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான குவாலிஃபையர் 2 மோதலில் தோல்வியுற்ற டூ பிலிஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இப்போது லீக் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டுடன் 15வது முறையாக IPL கோப்பையை வெற்றி பெற வேண்டும் என்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கனவு மீண்டும் கனவாகவே மாறியது. இப்போது, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் மோதலின் போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஒரு மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது, இந்த ஆட்டத்தில் அவர் இரண்டு ஓவர்களில் மூன்று சிக்ஸர்களை கொடுத்து மொத்தம் 31 ரன்களுடன் விக்கெட் இல்லாமல் முடித்தார். இப்போது முழு ஐபிஎல் 2022 சீசனிலும் சிராஜ் மொத்தம் 31 சிக்ஸர்களை வாரி இறைத்திருக்கிறார். இது ஒரு ஐபிஎல் சீசனில் எந்த வீரரும் கொடுக்காத அதிகபட்ச சிக்ஸராகும். முன்னதாக, ஐபிஎல் 2018ல் 29 சிக்ஸர்களை வாரி வழங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ இந்த மோசமான சாதனையை வைத்திருந்தார். இந்த சாதனையை இப்போது முகமது சிராஜ் தனதாக்கி இருக்கிறார்.
மே 31ம் தேதியன்று பொது விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதற்கிடையில், RCBன் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவும் இந்த சீசனில் சுமார் 30 சிக்ஸர்களை விட்டுக் கொடுத்ததால் இந்த பட்டியலில் சிராஜுக்கு பின்னால் இடம்பிடித்துள்ளார். இருந்தாலும், ஹசரங்கா தனது விக்கெட் எண்ணிக்கையால் அனைவரது கவனம் ஈர்த்துள்ளார். ஏனெனில் அவர் ஐபிஎல் 2022 சீசனில் மொத்தம் 26 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இருக்கிறார். மறுபுறம், ரூ. 7 கோடிக்கு பெங்களூரு அணியால் தக்கவைக்கப்பட்ட சிராஜ் சுமார் 15 போட்டிகளில் விளையாடி 514 ரன்களை விட்டுக்கொடுத்து வெறும் 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.