தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தில் இனி வாழைப்பழம்? அமைச்சர் விளக்கம்!
தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் மதிய உணவு திட்டத்தில் இனி வாழைப்பழம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
மதிய உணவு திட்டம்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் கருதி அனைவருக்கும் அரசு சார்பில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. தரமான மற்றும் சத்தான உணவு வகைகள் இந்த மதிய உணவு திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. படிப்படியாக இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு தினசரி முட்டை மற்றும் சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமில்லா விசா – மத்திய அரசு அறிவிப்பு!
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், திருச்சி மணச்சநல்லூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் அவர் நிருபர்களிடம் பேசியதாவது, ‘தமிழகத்தில் ஒரு சில தனியார் பள்ளிகளில் 100 சதவீத பள்ளி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெற்றோர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்க மறுக்கின்றனர்’
TN Job “FB Group” Join Now
‘குறிப்பிட்ட பள்ளியின் மீது புகார் அளித்தால் கண்டிப்பாக அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வாழைப்பழ விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு நடைமுறைப்படுத்தி வரும் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ இவ்வாறாக தெரிவித்துள்ளார்.