தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை – முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் தற்போது பெரும்பாலானோர் ஆன்லைன் ரம்மி விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்போது ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டம் இயற்றுவது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
ஆன்லைன் ரம்மி:
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட பிறகு இணையதள சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து தற்போது பெரும்பாலானோர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. ஆனால் இதனை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தடுப்பூசி முகாம் நடத்த திட்டம்!
இதற்கு உரிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கு இதுவரை விசாரணை செய்யப்படவில்லை. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டு வருவதால் தமிழக முதல்வர் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
Exams Daily Mobile App Download
இக்கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய மற்றும் இதனை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய குழு ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழு தனது பரிந்துரைகளை 2 வாரத்திற்குள் அரசுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசு ஆலோசனை செய்து விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சட்டம் மற்ற மாநிலங்களிலும் தடை விதிக்க முன் மாதிரியாக இருக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.