தமிழகத்தில் போதைப் பொருட்களுக்கு தடை விதிக்க மேல்முறையீடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழகத்தில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இதனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
போதை பொருட்கள்
தமிழகத்தில் 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018ம் ஆண்டு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
வேகமெடுக்கும் ‘நோரோ வைரஸ்’ .. அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை.. எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து அரசு!
Follow our Instagram for more Latest Updates
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை விதிக்க உச்ச நீதிமன்றம் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். அத்துடன் உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு அதிகபட்சமாக ஓராண்டு வரை மட்டுமே குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதனால் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அதிகாரத்தை மீறி புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.