திருப்பதிக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை – தேவஸ்தானத்தின் அதிரடி அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதனால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு வரும் போது இந்த பொருட்களை எடுத்து வரக்கூடாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கவனத்திற்கு
ஆந்திர மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதனால் நோய் தொற்று காலத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த நேரடி இலவச தரிசன முறை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது அனைத்து கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் இலவச நேரடி தரிசனத்தில் மகிழ்ச்சியாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அதன் காரணமாக இங்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்த வண்ணம் இருந்தது. அதனால் தேவஸ்தானம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதன்படி இது தொடர்பாக தேவஸ்தானம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பிளாஸ்டிக் போன்ற எளிதில் மக்காத பொருட்களை கொண்டு வர தடை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தண்ணீர் பாட்டில்கள், ஷாம்பு, தலைக்கு தடவ பயன்படும் எண்ணெய் உள்ளிட்டவை கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை 2022 – ITI தேர்ச்சி போதும்..!
அத்துடன் தேவஸ்தானத்தில் இயங்கும் கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அங்கு கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாட்டிலின் விலை ரூ.80 ஆக உள்ளது. இதில் பாட்டிலை திரும்ப தருபவர்களுக்கு ரூ.50 கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு அனைத்து பொருட்களையும் எளிதில் மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் கவர்களில் தான் கொடுக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அலிபிரியில் பக்தர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்று சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள்.