ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு தடை – ஜூலை 10 வரை எச்சரிக்கை நோட்டீஸ்!

0
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு தடை - ஜூலை 10 வரை எச்சரிக்கை நோட்டீஸ்!
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு தடை - ஜூலை 10 வரை எச்சரிக்கை நோட்டீஸ்!
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு தடை – ஜூலை 10 வரை எச்சரிக்கை நோட்டீஸ்!

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு உலகம் முழுவதும் தடை என்கிற திட்டம் நேற்றில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஜூலை 10 ஆம் தேதி வரைக்கும் விதியை மீறுபவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்கு தடை:

உலகம் முழுவதும் அதிக அளவிலான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நேற்றில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, உற்பத்தி செய்யவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்தால் குறைந்தது ரூ.1 லட்சம் வரைக்கும் அபராதம் விதிக்கப்படும் அல்லது 5 ஆண்டுகள் வரைக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் அறிவுறுத்தியுள்ளார்.

Exams Daily Mobile App Download

அதாவது, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் என கிட்டத்தட்ட 19 பொருட்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய தடையை மீறும் நிறுவனங்களுக்கு ஜூலை 10 ஆம் தேதி வரைக்கும் டில்லி அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிப்பு விடுத்துள்ளது. ஜூலை 10 ஆம் தேதிக்கும் பிறகு பிளாஸ்டிக்கை உபயோகிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ஏற்கனவே நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. இந்த சமயத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை அரசு மொத்தமாக முடக்கியதால் எக்கச்சக்கமான ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உலகில் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருவாய்த் துறை தொடர்ந்து கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி நிா்வாகம் மற்றும் பிற நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் விதிகளை மீறும் தொழில் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!