புதுச்சேரி, காரைக்காலில் பிப்.5ம் தேதி மது விற்பனைக்குத் தடை – அதிரடி உத்தரவு!
வள்ளலார் ஜோதி தினம் வருகிற பிப்ரவரி 5ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் மது விற்பனை செய்ய தடை செய்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வள்ளலார் ஜோதி தினம்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலாரின் ஜோதி தரிசன விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் வடலூரில் நிறுவப்பட்டுள்ள சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த நிலையில் இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி 5ம் தேதி அன்று வள்ளலார் ஜோதி தினம் நடைபெற உள்ளது. இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். மேலும் பக்தர்கள் அனைவரும் அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை’ என்று முழக்கமிட்டு பக்தியுடன் வழிபடுவார்கள்.
குடும்ப வன்முறை தடை சட்டம் – சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!
அதனால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிப்ரவரி 5ம் தேதி அன்று மதுவிற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.