பானிபூரி விற்க தடை – நோய் பரவல் எதிரொலி! அரசு உத்தரவு!
நேபாளம் நாட்டில் பானிபூரிக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்ட்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளதால் பானிபூரி விற்க தடை என அரசு திடீர் உத்தரவிட்டுள்ளது. மேலும், சுத்தமான நீரை பயன்படுத்தும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.
பானிபூரி விற்க தடை:
நேபாளம் நாட்டில் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் காலரா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது வரைக்கும் நேபாளம் நாட்டில் 12 பேருக்கு காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ள 12 பேருக்கும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து காலரா நோயை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் ஆய்வுப்பணிகளை தொடங்கியது. காலரா பெரும்பாலும் அசுத்தமான தண்ணீரிலேயே பரவக் கூடியது. ஆரோக்கியமான நபர்களுக்கு கூட கூடிய விரைவிலேயே காலரா வாய்ப்பு அதிகமாக இருப்பதால் தூய்மையான நீரை பயன்படுத்தவும், பருகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் உணவகங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமானதாக உள்ளதா என மாவட்ட நிர்வாகத்தினர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது பானிபூரியுடன் வழங்கப்படும் தண்ணீரில் காலரா பரவுவதற்குரிய பாக்ட்டீரியா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்த லலித்பூர் மாநகராட்சியில் பானிபூரி விற்க தடை என அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பானிபூரி பிரியர்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் 13,300 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்? அமைச்சர் முக்கிய தகவல்!
காலராவினால் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு ஏற்படுகிறது. இதனால், லேசான வயிற்று போக்கு இருந்தாலே உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் காலரா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் தற்போதிலிருந்தே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கத் தொடங்கியுள்ளது.