புதிய பொறியியல் கல்லூரிகள் திறக்க தடை நீக்கம் – ஏ.ஐ.சி.டி.இ அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகளை திறக்க கடந்த 2019 ஆம் ஆண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தடை விதித்த நிலையில் தற்போது அந்த தடையை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிய கல்லூரிகள்
இந்தியாவில் பல பொறியியல் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பொறியியல், தொழில்நுட்பத் துறைகளில், டிப்ளமோ, இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு புதிய கல்வி நிறுவனங்களை திறக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்தது. அதன்படி 2020-21-22 ஆம் ஆண்டில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் அனுமதி வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் சிப்காட் மூலம் மெகா ஜவுளி மண்டல திட்டம் – முதல்வர் கோரிக்கை!
இந்நிலையில் அந்த தடை உத்தரவு மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2022-23-24 ஆம் ஆண்டு வரை தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த தடையை நீக்கி இனி நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் திறக்க ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கி இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 2022-23 ஆம் ஆண்டில் பி. டெக் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. அதனால் தான் புதிதாக கல்லூரிகள் திறக்க தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் புதிய கல்லூரிகள் அமைக்கும் போது ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய கையேட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும், புதிய கல்லூரிகள் தொடங்கி மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு முன் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் பதிவு செய்து அங்கீகாரம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download