மும்பையில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தல் – 30 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் அசம்பாவித நிகழ்வுகளை தடுக்கும் வகையில் அம்மாநில தலைநகர் மும்பையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம்:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 ன் கீழ் 30 நாட்களுக்கு டிரோன் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரமுகர்களை தாக்கவும், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்குடன் பயங்கரவாதிகள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் மும்பை மாநகரில் நவம்பர் 13ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரை அதாவது அடுத்த 30 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் பிரஹன் காவல் கமிஷனரேட் பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ரிமோட்-கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியவைகளையும் பறக்க விட கூடாது.
Exams Daily Mobile App Download
அதே போல மைக்ரோ-லைட் விமானம், பலூன்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் ஆகியவைகளையும் பறக்க தடை என மும்பை காவல் துறை உத்தரவிட்டுள்ளது. தேவையற்ற கலவரங்களை தடுக்கவும், பொது மக்களின் உயிரை காக்கவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.