இந்தியாவில் சீன மொபைல்களுக்கு தடை – மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் மத்திய அரசு சீன செயலிகளுக்கு தடை விதித்திருப்பதை தொடர்ந்து தற்போது சீன மொபைல்களுக்கும் தடை விதிக்க ஆலோசித்து வருகிறது. இதனால் சீன மொபைல் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.
போன்களுக்கு தடை:
இந்தியா மற்றும் சீனாவுடனான லடாக் கல்வான் எல்லை பகுதியில் நிலவிய பதட்டத்தால் கடந்த 2020ம் ஆண்டு கிட்டத்தட்ட 300 சீன செயலிகள் தடை செய்யப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் டிக் டாக், வீ சாட் மற்றும் ஹலோ போன்ற அதிகமாக இந்திய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த செயலிகள் உட்பட 59 சீன மொபைல் செயலிகளை மத்திய அரசு தடை விதித்தது. மேலும் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இதுவரை 320 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்த தடைக்கு பின்பு சுமார் 13 மாதங்களுக்கு பின்பு ப்ளே இட் என்னும் சீன செயலி இந்தியாவிலேயே வேகமாக வளரும் செயலியாக இருந்தது. ஆரம்பத்தில் 28 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்திருந்த ப்ளே இட் தற்போது 67 மில்லியன் யூசர்களை பெற்றுள்ளது. ஆனால் இந்த செயலி சீன செயலி என்பதை காட்டாமல் தரவுகளை மறைத்து வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது ரூ.12 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள சீன போன் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய கால கட்டத்தில் இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் ஜியோமி, ஓப்போ மற்றும் ரியல்மி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக பங்கு வகிக்கிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு 7 ஆம் தேதியும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – அரசு அறிவிப்பு
அதனால் மத்திய அரசின் தற்போதைய முடிவு ஸியோமி, ரியல்மீ, ட்ரான்ஸன் போன்ற நிறுவனங்கள் மத்தியில் அச்சத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 5 ஜி துறையில் சீன நிறுவனங்களை அரசு தவிர்த்து வருவதன் தொடர்ச்சியாக சீன போன்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. தற்போது உள்ளூர் அதாவது இந்திய நிறுவனங்களின் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களான லாவா, மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனங்கள் செயல்பாட்டை ஊக்குவிக்கவே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.