இந்தியாவில் ஆன்லைன் கேம்களுக்கான விளம்பரங்களுக்கு தடை – கூகுளுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை!
நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக நடந்து வரும் மோசடிகள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி வரும் நிலையில், மத்திய அரசு முக்கிய முடிவினை எடுத்துள்ளது.
ஆன்லைன் கேம்கள்:
பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்த ஆன்லைன் கேம்கள் நாளடைவில் பணத்தை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்து விட்டது. ஆரம்பத்தில் கொஞ்சம் பணம் கைக்கு வருவது போலத்தான் இருக்கும். ஆனால் அதன்பிறகு நம்பி இவர்கள் போடும் பணம் முழுவதும் வீண் தான். இதனால் நாடு முழுவதும் பலர் அதிக அளவிலான பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு – இலவச Smart phone, Laptop…அரசின் அட்டகாசமான அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. மேலும், இது தொடர்பான விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கூகுள் மற்றும் யூடுயூப் இவற்றில் மட்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பரங்கள் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவற்றை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.