தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரத்திற்கு தடை? அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
நாடாளுமன்றத்தில் மின்சார திருத்த சட்ட மசோதா தாக்கல் நேற்று நடைபெற்றது. இந்த மசோதாவில் ஏழை விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் கிடையாது என்பது போன்ற பல முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்சார திருத்தம்
மத்திய அரசு அனைத்து துறைகளிலும் பல முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் மின்சார திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய மசோதாவின் மூலமாக ஊழியர்களுக்கு கடுமையான பாதிப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, இந்த மின்சார திருத்த சட்ட மசோதா ஏழை, எளிய பொது மக்கள் மற்றும் நெசவாளர்கள் என அனைவரையும் பாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
TN Job “FB Group” Join Now
மின்சாரத்துறைக்கு தற்போது ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது. இதனால், இதனை ஈடுகட்டும் விதமாக தனியார் துறையின் மூலமாக மின் வினியோகம் செய்வதற்கான வழிவகைகள் மசோதாவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் பல பாதிப்புகள் ஏற்பட கூடும். அதாவது, தமிழகத்தில் வழங்கப்பட்டு வந்த விவசாயிகள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
தமிழகத்தில் அரசு பேருந்துகள் தனியார் மயமாகுமா? அமைச்சர் விளக்கம்!
மேலும், மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மின் கட்டணங்களை தேசிய ஆணையமே முடிவு செய்யும் சூழல் ஏற்பட்டுவிடும். அதே போல, மின்சார விநியோகத்தின் பொறுப்பு மொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மேலும், பயனாளர்கள் தேவையான தனியார் நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல, மாநிலத்தின் மின் உற்பத்தியை மற்ற மாநிலங்களுக்கும் பங்கிட்டு தருவதற்கு அந்த மாநிலத்தின் ஒப்புதல் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்கட்டணம் மானியத்தை கணக்கில் கொள்ளலாம் கணக்கிடப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.