தமிழகத்தில் டிச.31ம் தேதி இரவு வரை கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை – டிஜிபி உத்தரவு!
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு வரை கடற்கரைகளில் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என்று டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
டிஜிபி அறிவுறுத்தல்:
ஒமைக்ரான் தொற்று பரவலால் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் 31 ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். தற்போது உள்ள சூழலில் நோய்த்தொற்று மேலும் அதிகரிக்காமல் இருக்க கடற்கரைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிப்பதாக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.3000 ரொக்கம் – முதல்வர் ஜாக்பாட் அறிவிப்பு!
மேலும் பொது இடங்களில் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டினால் ஓட்டுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார். டிசம்பர் 31 ஆம் தேதி இரவு காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனை சாவடிகள் அமைத்து பைக் மற்றும் காரில் வருபவர்களை கண்காணிக்க போவதாக கூறினார். பொதுமக்கள் அனைவரும் புத்தாண்டை அவரவர் வீடுகளில் கொண்டாடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் தீவிரமெடுக்கும் கொரோனா, கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிப்பு – பொதுமக்கள் அச்சம்!
திருட்டு சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் அதை தவிர்க்க புத்தாண்டையொட்டி வெளி ஊருக்கு செல்பவர்கள் அவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்லும்படி கேட்டுக் கொண்டார். தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி வெளியூருக்கு செல்பவர்கள் பைக், கார் போன்ற வாகனங்களை தவிர்த்து ரயில் அல்லது பேருந்துகளில் பயணிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.