2025 ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களுக்கு தடை – அரசு அதிரடி அறிவிப்பு!
வியட்நாம் தலைநகர் ஹானயில் காற்று மாசுபாடு மற்றும் வாகன நெரிசலை தவிர்க்க உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் 2025 ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கபட உள்ளது.
இரு சக்கர வாகனங்களுக்கு தடை:
இந்தியாவில் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பழைய வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதாலும் அதிலும் வரும் நச்சு புகை காரணமாகவும் காற்று மாசுமாடு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக பழைய வாகனங்களை உபயோகப்படுத்த அரசு தடை விதித்துள்ளது. மேலும் பழைய வாகனங்களை மாற்றுபவர்களுக்கு அரசு சார்பாக மானியத் தொகையும் வழங்கப்படுகிறது.
ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு எதிரொலி – மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?
அதனை தொடர்ந்து தற்போது வியட்நாமில் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஹானாய் வியட்நாமின் தலைநகர் ஹனாய் முக்கிய சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. அதனால் அங்கு மக்கள் வருகை எப்போதும் அதிகரித்து வருகிறது. மேலும் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடும் அதிகம் உள்ளது. இதனால் அதிகப்படியான வாகன நெரிசல்கள் மற்றும் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு எதிரொலி – மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?
இந்த காற்று மாசுபாட்டை தவிர்க்கும் நோக்கில் 2025-ஆம் ஆண்டு முதல் ஹனாயின் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்ல தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக சில முக்கிய சாலைகளில் இந்த தடை அமலுக்கு வரும் என்றும் அதன் பிறகு 2030ம் ஆண்டுக்குள் அனைத்து சாலைகளிலும் இருசக்கர வாகனத்திற்கு தடை விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.