திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை-கலெக்டர் உத்தரவு!ஏமாற்றத்தில் பக்தர்கள்!
திருவண்ணாமலை சிவபெருமான் கோயிலில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிரிவலம் செல்ல தடை:
தமிழகத்தில் மிகுந்த பிரசிக்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக விளங்க கூடியது தான் திருவண்ணாமலை திருக்கோயில் ஆகும். இந்த கோயிலில் சிவபெருமான் அருளி பக்தர்களுக்கு தரிசனம் வழங்கி வருகிறார். திருவண்ணாமலை என்றாலே நமக்கு நினைவில் வருவது கார்த்திகை தீபம் தான். அடுத்தபடியாக திருவண்ணாமலை கிரிவலம் தான் நினைவுக்கு வருகிறது. இந்த கிரிவலமானது பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலையை சுற்றியுள்ள 14 கி.மீ தூரத்தை சுற்றி வருவதாகும். அவ்வாறு கிரிவலம் வந்தால் பாவங்கள் நீங்கி விடும். மேலும் பாவம் செய்யும் எண்ணம் முற்றிலும் அகன்று விடும் என்பது ஐதீகம். வயதானவர்களும், உடல் நலிவுற்றவர்களும் வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவண்ணாமலை கோயிலில் பிரசித்தி பெற்ற சித்தர்கள் வலம் வருவதாக வரலாறு கூறுகின்றது.
தமிழகத்தின் மரைன் காவல்படையில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு!
இத்தகைய கிரிவலம் வருடத்தில் 365 நாட்களும் செல்லலாம் என்றாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது சிறப்பான ஒன்றாகும். திருமண நாள், பிறந்த நாள், நினைவு நாள் என்று எந்நாளும் சிவபெருமானை வேண்டி இந்த கோயிலுக்கு சொல்லலாம். மேலும் திங்கட்கிழமை கிரிவலம் வர இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வர கடன், வறுமை நீங்கும். புதன்கிழமை கிரிவலம் வர கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வர வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வர பிறவிப்பிணி அகலும். ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும். இவ்வாறாக மக்களால் நம்பப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 19 மாதங்களாக கோயில் கிரிவலம் நடைபெறவில்லை.
அக்.23ம் தேதி வரை 21 கிராமங்களில் பொது ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதனால் கோயில்கள் திறக்கப்பட்டு தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், கிரிவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாதத்துக்கான பவுர்ணமி நாளை செவ்வாய்க்கிழமை இரவு 7.56 மணிக்கு தொடங்கி மறுநாள் புதன்கிழமை இரவு 8.54 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் பவுர்ணமி தினங்களான நாளை காலை 6 மணி முதல் 21 ஆம் தேதி இரவு 12 மணி வரை திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதித்து அம்மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வரை மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார். அதனால் கிரிவலம் செல்ல தயாராக இருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் கிரிவலம் செல்ல விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.