டிச.25 முதல் ஜன.2 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட தடை – மாநில அரசு உத்தரவு!
நாடு முழுவதும் தீவிரமாக ஓமைக்ரான் தொற்று பரவி வருவதால் படிப்படியாக கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டில்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பண்டிகைகள் கொண்டாட தடை:
நாடு முழுவதும் தற்போது ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்றானது உருமாறிய கொரோனா வகையாக முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து தற்போது இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தொற்று பரவலின் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்திக்கொள்ளுமாறு அனைத்து ,மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு இல்லை – முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு!
அந்த வகையில் தொற்று அதிகமாக பரவியுள்ள டில்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் உத்திரபிரதேசத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஓமைக்ரான் தொற்று பாதிப்புகள் இல்லாத மாநிலமான மத்திய பிரதேசம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கு மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பண்டிகைகள் கொண்டாட தடை விதித்துள்ளது.
ஓமிக்ரான் பரவலை தடுக்க எந்த கட்டுப்பாடுகளும் இல்லை – மாநில முதல்வர் அறிவிப்பு!
அதாவது நாளை டிச.25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையும், இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பண்டிகையும் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை டிச.25ம் தேதி முதல் ஜன.2ம் தேதி வரை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் கொண்டாடுவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பேரணிகள், இசைக்குழுகள் போன்வற்றை கொண்டாட மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உத்தரவு மக்கள் கூட்டம் கூடினால் தொற்று அதிகரிக்கும் என்ற நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.