முல்லைப் பெரியாற்றில் குளிக்க தடை – காவல்துறை கடும் நடவடிக்கை!!
தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முல்லைப் பெரியாற்று நீரில் பொதுமக்கள் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மாவட்ட நிர்வாக அறிவிப்பு:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தில் புதிய உச்சத்தை அடைந்து வருவதால் நாளை (மே 6) காலை 4 மணி முதல் மே 20ம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. பொது போக்குவரத்து, வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் கூடுவதற்கும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேனி மாவட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கு ‘இது’ தேவையில்லை – மருத்துவ கவுன்சில் அறிவிப்பு!!
முல்லைப் பெரியாற்று அணையில் இருந்து பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் பின்னர் பெரியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் லோயர் கேம்ப் பகுதியில் ஆரம்பித்து குள்ளப்ப கவுண்டன் பட்டி, காமய கவுண்டன் பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி வழியாக வைகை ஆற்றை அடைகிறது. தேனி மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது கோடைகாலம் என்பதால் முல்லைப் பெரியாற்றில் பொதுமக்கள் குளிப்பதற்காக அதிக அளவில் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் மேலும் தொற்று பரவும் சூழல் ஏற்படும். எனவே, இன்று முதல் முல்லைப் பெரியாற்றில் பொதுமக்களை குளிக்கவும், துவைக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறினால் காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. காவல்துறையினர் ஆற்றின் கறை ஓரங்களில் கண்காணித்து வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்