இந்தியா, பெலாரஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல பயண தடை – அரசு அதிரடி அறிவிப்பு!
உலகில் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் சவுதி அரேபியா அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 16 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது.
பயண தடை:
இந்தியாவில் கொரோனா பரவலின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் தாக்கம் ஏற்பட்ட நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதில் குறிப்பாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. ஆனால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க விமான சேவைகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து கொரோனாவின் 3ம் அலையின் போது மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் கட்டுப்பாடுகளை முழுவதுமாக திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அண்மை காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் இந்தியாவில் ஓமைக்ரான் திரிபான எக்ஸ்இ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் பிஏ 4 வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் சவுதி அரேபியா அரசு லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா மற்றும் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு தனது குடிமக்கள் பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை நாட்டில் கொரோனா மேலும் பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.