மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மொத்தமாக கிடைக்கும் நிலுவைத்தொகை! முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மொத்தமாக கிடைக்கும் நிலுவைத்தொகை! முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மொத்தமாக கிடைக்கும் நிலுவைத்தொகை! முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மொத்தமாக கிடைக்கும் நிலுவைத்தொகை! முழு விவரம் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாத காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை தற்போது மொத்தமாக வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து அகவிலைப்படி நிலுவைத் தொகையை செலுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை கூட்டம் மேற்கொள்ள உள்ளது.

மத்திய அரசு ஆலோசனை:

கொரோனா நோய்த்தொற்று காரணமாய் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை 2020 ஆம் ஆண்டில் முடக்கப்பட்டது. இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்பு 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி பின்னர் 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவை மொத்தமாக செலுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை! அரசின் முக்கிய முடிவு!

கடந்த ஆண்டு 7 வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி மற்றும் பல பெரிய சலுகைகளை அரசு வழங்கியது. ஆனால் நிலுவைத் தொகை பிரச்சினை குறித்து முடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து மத்திய அரசு கேபினட் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இக்கூட்டத்தில் அரசு ஊழியர்களுடன் ஆலோசனை கேக்கப்ட்டு கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கேபினட் கூட்டத்துக்கு வருவதற்கு முன் கேபினட் செயலாளரிடம் இது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் 10 -12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – அமைச்சர் தகவல்!

இதனால் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை இந்த ஆண்டு செலுத்தப்படும் இன்றி அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, லெவல்-1 ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது. லெவல்-13 அல்லது லெவல்-14 ஊழியர்களுக்கு கணக்கிட்டால், அகவிலைப்படி அரியர் தொகை ரூ. 1,44,200 முதல் ரூ. 2,18,200 வரை இருக்கும். எனவே ஒரு சில ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!