கோபிக்காக மனம் மாறும் ராதிகா, ‘வேண்டாம்’ என புலம்பும் ரசிகர்கள் – பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியல் போற போக்க பார்த்தால் கோபியின் பக்கம் காற்றடித்து பாக்கியாவின் நிலைமை கவலை கிடமாக உள்ளது போல் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் கதையை தயவு செய்து மாற்றுங்கள் என கமெண்ட் பக்கத்தில் தொடர்ந்து கெஞ்சி வருகின்றனர்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் வரக்கூடிய எபிசோடுகள் மற்றும் அதன் ப்ரோமோக்களை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து ப்ளீஸ் கதையை மாற்றுங்கள் என கமெண்டில் கெஞ்சி வருகிறார்கள். ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன் பாக்கியாவை விவாகரத்து செய்த கோபி பாக்கியாவிடம் சிக்குவாரா? ராதிகாவுக்கு உண்மை தெரிந்தால் என செய்வார்? என பல கேள்விகளுக்கு தற்போது ஒளிபரப்பாக கூடிய எபிசோடுகள் பதிலாக உள்ளது. அதாவது கோபியின் லீலைகளை தெரிந்து கொண்ட ராதிகா ரசிகர்கள் எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு போயிடு என சொல்லி விரட்டிவிட்டார்.
சன் தொலைக்காட்சியில் முடிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் பிரபல சீரியல் – ரசிகர்கள் ஷாக்!
இதனால் அவ்ளோதான் கோபி மற்றும் ராதிகாவின் காதல் சேப்டர் முடிந்தது என நினைத்து முடிப்பதற்குள் சீரியலில் ரொம்ப நாள் பிறகு என்ட்ரி கொடுத்தவர் மூலம் இயக்குனர் மொத்த கதையையும் மாற்றியுள்ளார். வேற ஒன்னுமில்லைங்க! ராதிகாவின் அம்மா தான் அந்த நபர். நடந்த அனைத்தையும் தெரிந்து கொண்ட ராதிகாவின் அம்மா தனது மகள் வாழ்க்கை மட்டும் நல்லா இருந்தா போதும் என்ற நினைப்பில் கோபியை ஏற்றுக்கொள்ளுமாறு ராதிகாவை பேசி மாற்ற முயற்சிக்கிறார்.
Exams Daily Mobile App Download
பாக்கியா டீச்சரை ஏமாற்ற ஒரு நாளும் நினைக்கமாட்டேன் என உறுதியாக இருந்து வந்த ராதிகாவிடம் மயூவை காரணம் காட்டி மனதை மாற்ற நினைக்கிறார். கடந்த எபிசோடு வரை ரசிகர்கள் இல்லை, கண்டிப்பாக ராதிகா ஒத்துழைக்க மாட்டார் என நினைத்து கொண்டிருக்க, தற்போது மொத்த கதையும் தலைகீழாக மாறியியற்ப்பது ப்ரோமோ மூலம் தெரிய வருகிறது. ஒரு வேளை ராதிகா ஒத்துகொள்ளவார் போல பச்சையாக தெரிகிறது. இதனால் ரசிகர்களும் தயவு செய்து கதையை மாற்றுங்கள்! ராதிகா ப்ளீஸ் கோபியை ஏற்காதீங்க! என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.