வேறொரு பெண்ணை மனைவியாக ராதிகாவிடம் காட்டும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
வேறொரு பெண்ணை மனைவியாக ராதிகாவிடம் காட்டும் கோபி - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
வேறொரு பெண்ணை மனைவியாக ராதிகாவிடம் காட்டும் கோபி - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
வேறொரு பெண்ணை மனைவியாக ராதிகாவிடம் காட்டும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அனைத்து தமிழ் இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்து விரும்பி பார்க்கப்பட்டு வரும் கதைக்களத்தை கொண்ட பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி செய்த காரியம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

பாக்கியலட்சுமி:

தமிழகத்தில் குடும்ப பெண்களின் ஆதரவை பெற்று இந்த ஆண்டு விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் அதிக வெற்றி கோப்பைகளை தட்டிச் சென்ற பெருமை பாக்கியலட்சுமி சீரியலுக்கே சேரும். அந்த வகையில் சீரியலின் கதைக்களம் தற்போது சூடுபிடித்து நகர்கிறது. கடந்த எபிசோட்டில் கூட கோபி குறித்த உண்மைகளில் சிலவற்றை மூர்த்தி, ராதிகாவிடம் சொன்னதை அடுத்து இன்றைய எபிசோட்டில் எழில், பாக்கியாவிடம் அப்பாவை நம்பாதம்மா! அவர் நீ நினைக்குற மாதிரி ரொம்ப நல்லவர் இல்ல! என்று சொன்னதும் அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்கியா சும்மா என்னை போட்டு குழப்பாத, மொத எந்திரிச்சு போ என சொல்கிறாள்.

ராதிகா, பாக்கியாவிடம் வசமாக மாட்டிக் கொண்ட கோபி – “பாக்கியலட்சுமி” சீரியல் கதையில் வரும் திருப்பங்கள்!

இந்த பக்கம் கோபி ராதிகா வீட்டிற்கு வந்ததும், அவள் கோபியை பார்த்து உங்களை நான் எப்போ வர சொன்னா, எப்போ வர்றீங்க என கோப கேள்விகளுடன் பார்க்கிறாள். கோபியும் ஏன்ம்மா? என்னாச்சு? என கேட்க அவளும் நான் உங்கட்ட ஒன்னு கேக்கணும்! நீங்க உங்க குடும்பத்தை பத்தி சொன்ன எல்லாமே உண்மை தானா? உங்க குடும்பத்தை பத்தி நான் தெரிஞ்சிக்கணும் என சொல்கிறாள். அதற்கு கோபி ஏன் திடீர்னு கேக்குற? என கேட்க, ராதிகாவும் என்னுடைய அம்மா என்னுடைய கணவர் ராஜேஷ் என எல்லார் குறித்தும் சொல்லியிருக்கேன், காட்டியிட்டுருக்கேன். ஆனா நீங்க அப்டி இல்லை என சொல்கிறார்.

இதை கேட்டு கோபி அதிர்ச்சியில் என்ன சொல்வேதென தெரியாதவனாக என் குடும்பத்தை பார்த்து நீ என்ன பண்ண போற? எனக்கு குடும்பமே நீயும் மயூவும் மட்டும் தான் இனிமே என சொல்லி சமாளிக்கிறார். ஆனாலும் ராதிகா தொடர்ந்து கேள்வி மேல கேள்வி கேட்க, கோபியும் சரி கூட்டிட்டு வரேன் என சமாளித்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அதன் பிறகு பாக்கியா, எழிலுக்கு அமிர்தாவை கல்யாணம் செய்தால் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும். அதை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டும் என ஐடியா கொடுக்கிறார்.

Exams Daily Mobile App Download

இந்த பக்கம் கோபி நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவருடைய நண்பர் சதீஷை சந்தித்து சொல்ல, அவரோ பாக்கியா ரொம்ப நல்ல பொண்ணு அதனால ராதிகாவிடம் எல்லா உண்மையையும் சொல்லி எஸ்கேப் ஆகிடு என கூறுகிறார். அதற்கு கோபி, அவ இல்லாம என்னால வாழவே முடியாது, ராதிகா தான் எனக்கு எல்லாமே என சொல்கிறார். இதை கேட்ட சதீஷ் கிண்டலாக நான் ஒரு ஐடியா சொல்லவா வேற யாராவது ஒரு பேமிலி போட்டோல உன்னோட முகத்தை மாத்தி காமிச்சுடு என சொல்ல, பயத்தில் இருக்கும் கோபியும் சூப்பர் ஐடியா என்று கூறுகிறான். அதற்க்கு கோபியின் நண்பரும் நீ டென்ஷன்ல இருக்க அதனால நான் என்ன சொன்னாலும் உனக்கு அது சரியாதான் இருக்கும் என சொல்லி கிண்டல் அடிப்பதுடன் எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!