ஈஸ்வரியிடம் வசமாக மாட்டிக் கொள்ளும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் TRP யில் கலக்கி வருகிறது. கோபியின் திருட்டு தனம் எப்போது பாக்கியாவுக்கும், ராதிகாவுக்கு தெரியவரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் கோபி மூர்த்தியிடம் நடந்து கொண்டது சரி இல்லை என ஈஸ்வரி கோபப்படுகிறார். இதை கேட்டு பாக்கியாவுக்கு கோபி மீது சந்தேகம் எழுந்து உள்ளது.
சீரியலில் அடுத்த ட்விஸ்ட்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்து பரபரப்பான பல நிகழ்வுகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. அந்த சேனலின் டாப் தொடர்களில் முக்கியமானது பாக்கியலட்சுமி. சுவாரஸ்யத்தை மேலும் கூட்ட அவ்வப்போது இரண்டு சீரியல்களை ஒன்று சேர்த்து, அங்குள்ள கதாபாத்திரங்கள் இந்த சீரியலிலும், இங்குள்ள கதாபாத்திரங்கள் அந்த சீரியலிலும் வரும்படி கதையை சற்று மாற்றியமைப்பது வழக்கம். அதன்படி கடந்த வாரம் முதல் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் வரும் கதாபாத்திரங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்களுடன் ஒளிபரப்பானது.
முடிவுக்கு வந்த சன் டிவியின் “சித்தி 2” சீரியல் – இறுதி நாள் புகைப்படங்கள் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!
சீரியல் கதையின்படி, கோபி அப்பாவின் 75 ஆவது பிறந்தநாளை கொண்டாட அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். இந்த விழாவிற்கு வந்த மூர்த்தி, தனத்திற்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டது. தனம், மூர்த்தி இருவரும் ஊருக்கு கிளம்பும் போது ராதிகா வீட்டிற்கு சென்று கோபி நல்லவர் இல்ல, அவர் உங்களையும் அவரோட குடும்பத்தையும் சேர்த்து ஏமாற்றுகிறார் என சொல்லிவிட்டு சென்றனர். மறுபுறம் ஈஸ்வரி, கோபி வந்ததும் கேட்போம் எனக்கு கோபி தான் தப்பு செஞ்சு இருப்பதாக தோணுது, இவன் பயங்கரமான ஆளாக மாறி கொண்டே இருக்கான் என கூறி கோபி பொய் சொல்வதை ஈஸ்வரி கண்டுபிடித்து விடுகிறார். இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு என நான் பார்க்க தான போகிறேன் என சொல்கிறார்
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் எழில், அப்பாவுக்கு அன்னைக்கு நெஞ்சு வலியே வரல, ஏதோ ஒரு காரணத்திற்காக நடித்து உள்ளார் என பாக்கியவிடம் சொல்லி விட்டார். மறுபுறம் ராதிகா, கோபியிடம் உங்க குடும்பத்தை நான் பாக்கணும் என்று கேட்க அவர் அதெல்லாம் முடியாது என சொல்லி விடுகிறார். அப்போ வீட்டை விட்டு வெளிய போங்க என்று கோபியை விரட்டி விட்டார் ராதிகா. தற்போது கதையில் பயங்கரமாக சூடு பிடித்து உள்ளது. அனைவரின் கவனமும் கோபியின் மீது திரும்பி உள்ளது. இனி வரும் எபிசோடுகளில் கோபியின் பித்தலாட்டம் அனைவருக்கும் தெரிய வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.