ராதிகா பற்றி கூறியதை மறந்த கோபி, அதிர்ச்சியில் பாக்கியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
குடிபோதையில் அனைத்து உண்மையும் ராதிகா மற்றும் பாக்கியா இருவரிடமும் கோபி கூறிவிட்டார். போதை தெளிந்ததும் என்ன நடந்தது என்றே தெரியாமல் ராதிகாவின் வீட்டிற்கு கோபி சென்று ராதிகாவிடம் திட்டு வாங்குவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளுமே பாக்கியா மற்றும் ராதிகா இருவருக்குமே தெரிந்து விட்டது. இதற்குப் பிறகு பாக்கியாவிற்காக ராதிகா கோபியை விட்டுக் கொடுப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது எப்போது கோபி வீட்டிற்கு வந்தாலும் ராதிகா உங்களது வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என சண்டை போட்டபடி இருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கோபி நன்றாக குடித்துவிட்டு ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார்.
கோபி குடிபோதையில் என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியாவும் கோபியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டுகிறார். பாக்கியா டீச்சர் தான் உங்களது மனைவியா என ராதிகா கோபியிடம் கேட்க ஆம் பாக்கியா தான் என்னுடைய மனைவி என கூறுகிறார். கோபியும் நம்மை ஏமாற்றி விட்டார் என ராதிகா கதறி அழுகிறார். பின்பு பாக்யாவின் வீட்டிற்கும் போதையில் தள்ளாடியபடி கோபி செல்கிறார். அங்கும் போதையில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பாக்கியா இருக்கும்போது உனக்காகத்தான் எனது குடும்பத்தையே விட்டு வர நினைத்தேன். உன்னை விட்டு என்னால் இருக்கவே முடியாது என கூறுகிறார்.
Exams Daily Mobile App Download
கோபிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பது பாக்கியாவிற்கும் தெரியவருகிறது. பின்பு, காலையில் போதை தெளிந்ததும் இரவு என்ன நடந்தது என்பதை கோபி மறந்துவிடுகிறார். பாக்கியாவிடம் கோபி எப்போதும் போல் வந்து சகஜமாக பேசுகிறார். ஆனால், பாக்கியா கோபியிடம் இரவு நடந்தது பற்றி எதுவுமே கேட்காமல் சாதாரணமாக பேசுகிறார். பின்பு ராதிகாவின் வீட்டிற்கு கோபி சென்றதும் ராதிகா கண்டபடி கோபியை திட்டுகிறார். இங்கு எதற்காக நீங்கள் வந்தீர்கள் என கண்டபடி திட்டுகிறார். என்ன நடந்திருக்கும், ஒரு வேளை நேற்று குடித்துவிட்டு வந்ததால் தான் ராதிகா கோவப்படுகிறாளோ என கோபி புலம்பும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.