ராதிகாவுடன் கோபி செய்து கொண்ட திருமணம், அதிர்ச்சியில் பாக்கியா – சீரியலில் திடீர் திருப்பம்!
முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமியில் தற்போது கோபி சிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. நாளைய எபிசோடில் கோபி குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட அந்த நேரம் ராதிகா வருகிறார். அதனால் அவர் மாட்டிக் கொள்வது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் ராதிகாவிற்கு உண்மை தெரிந்தாலும் அவர் கோபியை திருமணம் செய்ய போகிறார். அதனால் பாக்கியாவிற்கு அது பெரும் அதிர்ச்சியாக இருக்க போகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசியான பாக்கியாவின் குடும்பக் கதையை மையமாக வைத்து கதை கொண்டு செல்லப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் கோபி சீக்கரம் மாட்டிக் கொள்ள வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வர அதுவே கோபிக்கு பெரிய சிக்கலாக இருக்கிறது. அவரால் அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது.
கண்ணம்மாவை பாராட்டிய பாரதி, கடுப்பில் வெண்பா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!
இதற்கிடையே பாக்கியா ராதிகாவை அழைக்க ராதிகா கோபி கண்டிப்பாக வர வேண்டும் என சொல்கிறார். ஆனால் கோபி அதை தடுக்க பல முயற்சிகளை செய்ய இறுதியில் ராதிகாவிடம் நெஞ்சு வலி என சொல்லி கோபி தப்பிக்கிறார். ஆனால் ராதிகா பாக்கியா வீட்டிற்கு வருவதை கோபியால் தடுக்க முடியவில்லை. நாளைய எபிசோடில் கோபி தனது அப்பாவின் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட அப்போது ராதிகா மயூராவுடன் வருகிறார். அதை பார்த்து கோபிக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதனால் கோபி மாட்டிக் கொள்ள இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் கோபி பற்றிய உண்மை தெரிந்து ராதிகா அதிரடி முடிவு ஒன்றை எடுக்க இருக்கிறார். அதாவது அவர் கோபியை திருமணம் செய்ய வேண்டும் என சுயநலமாக யோசிக்கிறார். அதனால் பாக்கியாவிற்கு இந்த விஷயம் தெரிந்து பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இனி சீரியலில் கோபி ஒருவர் மட்டுமே வில்லனாக இருந்த நிலையில் ராதிகாவும் வில்லியாக இருக்க போகிறார்.