ராதிகா, கோபியின் திருமண வைபோகம் – மணக் கோலத்தில் கோபி! அதிர்ச்சிடைந்த பாக்கியா!
இந்த வாரம் ராதிகா மற்றும் கோபியின் திருமண வைபோகம் நடைபெறவுள்ளது. ராதிகாவுக்கும் கோபிக்கும் திருமணம் நடைபெறுமா அல்லது பாக்கியா திருமணத்தை தடுத்து நிறுத்துவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. எத்தனை பிரச்சனை வந்தாலும் கோபி அசால்ட்டாக பாக்கியாவை ஏமாற்றி கொண்டிருக்கிறார். கண்ணுக்கு முன்னால் கோபி தவறு செய்தாலும் பாக்கியா கோபியை நம்பி கொண்டிருக்கிறார். தற்போதெல்லாம் முழுக்க முழுக்க ராதிகாவுடன் தான் கோபி நேரத்தை செலவிட்டு வருகிறார். இரவு நேரங்களில் கூட பாக்கியா வீட்டிற்கு செல்வதில்லை. தற்போது கூட மயூ மற்றும் ராதிகாவை அழைத்து கொண்டு பார்க்கிற்கு சென்றார்.
அதே பார்க்கிற்கு தான் பாக்கியாவும் குடும்பத்துடன் சென்றிருந்தனர். பின்னர் இனியா மூலமாக பாக்கியாவும் இங்கு தான் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு பார்க்கை விட்டு ஓட்டம் பிடிக்கிறார். பார்க்கை விட்டு வெளியேறும் போது கோபியை எழில் பார்த்துவிடுகிறார். ஆனால் ராதிகாவை எழில் பார்க்கவில்லை. இதற்கு நடுவே இனியாவிடமும் நான் உனது அம்மாவை விட்டு பிரிந்துவிட்டால் யாருக்கு துணையாக நிற்பாய் என கேட்கிறார். அதற்கு இனியாவும் நான் கண்டிப்பாக உங்களுக்கு தான் துணையாக இருப்பேன் என கூறுகிறார். உடனே கோபிக்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அனைத்தையும் மறைத்து மறைத்து செய்து வந்த கோபி திருமணம் அளவுக்கு வந்து விட்டார். இந்த வாரம் ராதிகா மற்றும் கோபியின் திருமண வைபோகம் நடைபெறவுள்ளது. திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு பாக்கியா குடும்பத்தையும் ராதிகா அழைத்திருக்கிறார். மணக் கோலத்தில் ராதிகாவின் பக்கத்தில் கோபி இருப்பதை பார்த்து பாக்கியாவின் நிலை என்னவாகும். தன்னுடைய உரிமையை பாக்கியா விட்டு கொடுப்பாரா அல்லது எனது கணவரை யாருக்காகவும் விட்டுத் தர மாட்டேன் என சண்டைபிடிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.