அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ளும் பாக்கியா – தப்பிக்க வழியில்லாமல் விழிக்கும் கோபி!
பாக்கியாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த போது கூட கோபி உதவிக்கு வரவில்லை. இதனால் கோபி மீது பாக்கியா கொலை வெறியில் இருக்கிறார். இதனால் கோபியை பாக்கியா கண்டபடி திட்டுபடியாகவும், உண்மை தெரிந்துவிட்டதோ என பயப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாக்கியாவின் நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோபி தவறு செய்துகொண்டிருக்கிறார். எப்போது தான் பாக்கியாவிடம் கோபி கையும் களவுமாக மாட்டிக்கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தன்னை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ளும் மனைவியை விட்டுவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொள்ள கோபி துடித்து கொண்டிருக்கிறார். ராதிகாவும், பாக்கியாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் இருவரையும் பிரிக்க பிளான் செய்கிறார்.
இனி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லையாக களமிறங்கும் பிரபல நடிகை ஆல்யா மனசா – ரசிகர்கள் அதிர்ச்சி!
அதாவது தன்னை பற்றிய உண்மைகள் இருவருக்கும் தெரிய வந்துவிடுமோ என கோபி பயந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைக்கிறார். பின்பு ராதிகா மயூவின் பிறந்தநாளுக்காக நூறு ஆதரவற்ற குழந்தைகளுக்கு சமைக்கச் சொல்லி பாக்கியாவிடம் ஆர்டர் கொடுக்கிறார். பின்பு, பாக்கியா சமைத்த சாப்பாட்டில் கோபி ஏதோ ஒன்றை கலந்து விடுகிறார். இதனால் அந்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து ஆதரவற்ற குழந்தைகளும் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் பாக்கியாவை கைது செய்தனர். பாக்கியாவை நம்பியதிற்கு நமக்கு துரோகம் இழைத்து விட்டார் என ராதிகா பாக்கியாவின் மீது கொலைவெறியில் இருக்கிறார்.
ExamsDaily Mobile App Download
எப்படியோ பாக்கியாவின் மீது ராதிகாவிற்கு தவறான பிம்பத்தை ஏற்படுத்தி விட்டோம் எனக் நினைத்து கோபி மகிழ்ச்சியில் இருக்கிறார். கடைசி வரை பாக்கியாவை காப்பாற்ற காவல் நிலையத்திற்கு கோபி வரவே இல்லை. பின்பு, எதுவுமே நடக்காதது போல வீட்டிற்கு கோபி வருகிறார். கோபியை பார்த்ததுமே பாக்கியாவிற்கு கோவம் அதிகமாகி கண்டபடி திட்டுகிறார். அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு தெரிந்திருக்குமோ என கோபி பயத்தில் நடுங்குவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.