பாக்கியாவை கைது செய்த போலீசார், உணவில் விஷம் வைத்த கோபி – ‘பாக்கியலட்சுமி’ தொடரில் அடுத்த திருப்பம்!

0
பாக்கியாவை கைது செய்த போலீசார், உணவில் விஷம் வைத்த கோபி - 'பாக்கியலட்சுமி' தொடரில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவை கைது செய்த போலீசார், உணவில் விஷம் வைத்த கோபி - 'பாக்கியலட்சுமி' தொடரில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவை கைது செய்த போலீசார், உணவில் விஷம் வைத்த கோபி – ‘பாக்கியலட்சுமி’ தொடரில் அடுத்த திருப்பம்!

மயூவின் பிறந்தநாளுக்கு சமைக்க சொல்லி பாக்கியாவிடம் ராதிகா ஆர்டர் கொடுத்திருப்பார். தற்போது பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைவரும் மயங்குவதாக பாக்கியாவை போலீஸ் கைது செய்யும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு எப்போது தான் தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். பாக்கியாவின் கண்ணுக்கு முன்னால் கோபி தவறு செய்தும் கூட பாக்கியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாக்கியா ஏன் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார் என ரசிகர்களும் கோபி மீது கோவப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

பாக்கியா சமைத்ததை சாப்பிட்டு உடம்பு சரியில்லாமல் போன குழந்தைகள், பதட்டத்தில் ராதிகா – இன்றைய எபிசோட்!

ஒவ்வொரு தடவையும் பாக்கியாவிடம் கோபி மாட்டிக்கொள்வது போல வந்து தப்பித்து கொண்டேதான் இருக்கிறார். சமீபத்தில் கூட மயூவின் பிறந்தநாளுக்கு 100 பேருக்கு சமைத்து தர வேண்டும் என பாக்கியாவை தேடி ராதிகா வந்திருப்பார். அப்போது ராதிகாவிடம் செல்வி, நீங்கள் திருமணம் செய்துகொள்ள போகும் கணவரை மட்டும் எங்களது கண்ணில் படாமல் ஒழித்தே வைத்திருக்கிறீர்கள் என கூறுகிறார். உடனே ராதிகா, கோபியின் புகைப்படம் ஏதேனும் மொபைல் போனில் இருக்கிறதா என தேடுகிறார். ஆனால் கோபியின் புகைப்படம் மொபைல் போனில் ஏதும் இல்லாத காரணத்தினால் உங்களுக்கு அவரை நேரிலேயே அறிமுகம் செய்துவைக்கிறேன் என கூறிவிட்டு கிளம்புகிறார்.

தற்போது மயூவின் பிறந்தநாளுக்காக பாக்கியா 100 பேருக்கு சமைத்து கொடுக்கிறார். ஆனால் பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை மயூ மற்றும் ராதிகாவை சாப்பிட விடாமல் கோபி இருவரையும் ஹோட்டலுக்கு அழைத்து செல்கிறார். அதற்கு பிறகு பாக்கியா சாமித்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைவரும் மயக்கமடைகிறார்கள் என போலீசுக்கு தகவல் சென்றுள்ளது. இதனால் பாக்கியாவை போலீஸ் கைது செய்யும்படியாக ப்ரோமோ ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!