கோபி மீது சந்தேகப்படும் பாக்கியா, இருவரையும் சந்திக்க வைக்க திட்டமிடும் ராதிகா – இன்றைய எபிசோடு!

0
கோபி மீது சந்தேகப்படும் பாக்கியா, இருவரையும் சந்திக்க வைக்க திட்டமிடும் ராதிகா - இன்றைய எபிசோடு!
கோபி மீது சந்தேகப்படும் பாக்கியா, இருவரையும் சந்திக்க வைக்க திட்டமிடும் ராதிகா - இன்றைய எபிசோடு!
கோபி மீது சந்தேகப்படும் பாக்கியா, இருவரையும் சந்திக்க வைக்க திட்டமிடும் ராதிகா – இன்றைய எபிசோடு!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எழில், ஜானுவுடன் பழகுவதை பார்க்கும் அமிர்தாவுக்கு பொறாமை உண்டாகிறது. மறுபக்கத்தில் கோபி மற்றும் பாக்கியாவை மீட் செய்ய வைக்க பிளான் போட்டிருப்பதை கோபியிடம் சொல்கிறார் ராதிகா.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் புதிய எபிசோடில் ராதிகாவுடன் டியர், டார்லிங் என கொஞ்சி குலாவி விட்டு திரும்பி பார்க்கும் கோபி, பாக்கியா அங்கு நிற்பதை பார்த்து பதற்றப்படுகிறார். பிறகு சமாளித்து விட்டு அங்கிருந்து கிளம்பும் கோபியை நினைத்து சந்தேகம் கொள்கிறார் பாக்கியா. தொடர்ந்து, கிச்சனுக்கு வரும் ஜெனியிடம், யாரையெல்லாம் டியர் என கூப்பிடுவார்கள் என்று பாக்கியா கேட்க, நமக்கு பிடித்த எல்லாரையும் அப்படி கூப்பிடலாம். எங்க மம்மி கூட என்னை, இனியாவை அப்படி தான் சொல்வார்கள். ஆனால் அப்பா என்னை மட்டுமே டியர் என்று சொல்வார் என கூறுகிறார் ஜெனி.

தனத்திடம் கோபிக்கும் மீனா, செய்த தவறுக்காக வருத்தப்படும் ஜீவா – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

தொடர்ந்து காபியை எடுத்து கொண்டு ஜெனி அங்கிருந்து கிளம்ப, பழைய படத்தில் எல்லாம் ஹீரோ அவரது காதலியை டியர் என சொல்வார்கள். உன் மாமா கூட என்னை அப்படி ஒரு முறை கூப்பிட்டார் என கூறிவிட்டு வெட்கப்பட்டு அங்கிருந்து கிளம்புகிறார் ஈஸ்வரி. தொடர்ந்து எழிலும், ஒருவர் தான் காதலிப்பவரை தான் டியர் என்று சொல்வார். ஆனால், நீ சொல்வது போல அந்த நபர் 47 அல்லது 48 வயதானவராக இருந்தால் கண்டிப்பாக அது அவரது மனைவியாக இருக்காது என்று கிண்டலாக சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இதனை நினைத்து வருத்தம் கொள்கிறார் பாக்கியா.

மறுபக்கத்தில் ஆபிசில் வைத்து எழில், சதீஷ், ஜானு எல்லாரும் பேசிக்கொண்டிருக்க எழிலுக்கு கால் செய்கிறார் அமிர்தா. ஆபிசில் நடைபெறும் வேலையை பற்றி எழிலிடம் பேசும் அமிர்தா அங்கு ஜானு இருப்பதை அறிந்து கொள்கிறார். இதனால் பொறாமை கொள்ளும் அமிர்தா தனக்கு இருந்த வேலையை விட்டு விட்டு ஆபிசுக்கு கிளம்பி வருகிறார். பிறகு, எழிலின் கதையை பாராட்டி ஜானு பேச இருவரும் மாறி மாறி கையை பிடித்து கொள்கின்றனர். அப்போது டீ குடிக்க கிளம்பும் ஜானு, எழிலை கூப்பிட அமிர்தா முறைக்கிறார்.

உடனே நான் வரவில்லை என்று எழில் சொல்லி விடுகிறார். பிறகு அமிர்தா வேலையே பார்க்க கிளம்ப, அமிர்தா எழிலை காதலிக்கவில்லை என்று சொன்னாலும் எழில் மீது ஒரு பக்கம் அன்பு இருப்பதாக சொல்கிறார் சதீஷ். பிறகு, பாக்கியா சமையல் செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு கால் செய்யும் ராதிகா நான் சொல்லும் இடத்தில் சாப்பாட்டை டெலிவரி செய்யுங்கள் டீச்சர் என கேட்க, சரி என சொல்லி விட்டு கிளம்புகிறார் பாக்கியா. மறுபக்கத்தில், ராதிகாவின் வீட்டுக்கு வரும் கோபியிடம் நீங்கள் பாக்கியாவை மீட் செய்ய வேண்டும் என ராதிகா கூறுகிறார்.

அப்போது, எனக்கு வேலை இருக்கிறது என கோபி மழுப்ப இல்லை நீங்கள் இன்னைக்கு டீச்சரை மீட் செய்து தான் ஆக வேண்டும். கண்டிப்பாக அவர்களை சந்திக்க வேண்டும். நீங்கள் டீச்சர் என்று சொன்னாலே எஸ்கேப் ஆகி விடுகிறீர்கள். அது எதற்காக என்று இன்னைக்கு நான் தெரிந்து கொள்ள வேண்டும் என கண்டிப்புடன் சொல்லி விட்டு தயாராகிறார் ராதிகா. அப்போது இந்த கதையோட கிளைமேக்ஸ் இன்னைக்கு தானா என கோபி புலம்புவது போல இன்றைய எபிசோடு வெளியாக இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!