மரணப்படுக்கையில் இருக்கும் ராமமூர்த்தி, கோபியின் உண்மைகளை சொல்வாரா? “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த வாரம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பற்றிய உண்மை எல்லாமே தெரிந்த ஒரே ஆளாக கோபியின் தந்தை ராமமூர்த்தி இருக்கிறார். இந்நிலையில் கோபியின் நடவடிக்கை சரி இல்லாமல் இருப்பதால் அவருக்கு மீண்டும் உடம்பு சரியில்லாமல் போகிறது. இதெல்லாம் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா படும் கஷ்டங்களை பார்த்து பலர் அனுதாபப் படுகின்றனர். தங்களது வீட்டில் இருக்கும் ஒரு பெண் போல பார்த்து பாக்கியா வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் கோபி பாக்கியாவை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறார். அதற்காக பல வேலைகளை அவர் செய்கிறார். பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து வாங்கிவிட்டார்.
ஆலியா மானசா 2வது குழந்தை பிறப்புக்கு பிறகு செய்த காரியம் – வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் உற்சாகம்!
ஆனால் அதெல்லாம் எதுவும் தெரியாமல் பாக்கியா கோபியை நம்பிக் கொண்டே இருக்கிறார். பாக்கியா வீட்டில் கோபியின் தந்தைக்கு கோபியின் முழு வேலையும் தெரியும், அவர் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார் என்பது வரை தெரிந்தாலும் பாக்கியாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் அவர் அமைதியாக இருக்கிறார். அடிக்கடி கோபியை எச்சரித்து வருகிறார். அப்பா இன்னும் திருந்தாமல் இருப்பது எழிலிற்கும் தெரியும். அதனால் அப்பாவை தன்னுடைய முதல் படம் பார்க்க வர வேண்டாம் என சொல்ல கோபி அதை பாக்கியாவிடம் சொல்லிவிடுகிறார்.
அதனால் பாக்கியா எழில் மீது கோவமாக இருக்கிறார். எழிலிற்கு கோபியை பற்றிய உண்மை எல்லாம் சொல்ல முடியாமல் இருக்கிறது. இந்நிலையில் வீட்டில் கோபியால் அடிக்கடி சண்டை வருவதை நினைத்து ராமமூர்த்தி வருத்தத்துடன் இருக்கிறார். அதனால் அவருக்கு மீண்டும் உடம்பு சரி இல்லாமல் போக அதனால் அவரை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். டாக்டர் அவரை காப்பாற்றுவது கடினம் என சொல்ல, மரணத்தின் விளிம்பில் அவர் உண்மையை சொல்வாரா என்பதே அடுத்து வர இருக்கும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.
தாத்தா உண்மையை எழில்யிடம் செல்லாமல் இறந்துவிடுவார் என்னவென்றால் அப்போதுதான் serial இன்னும் 3 வருடம் ஓட்ட முடியும்😁😀 உண்மையை சொன்னால் 3 மாததில் serial முடிஞ்சிவிடும் 😂🤣