கார் விபத்தில் மாட்டிக்கொண்ட ‘பாக்கியலட்சுமி’ ஜெனி – அவரே வெளியிட்ட பதிவு!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் தற்போது ஒரு கார் விபத்தில் சிக்கியுள்ளார். அவரே அந்த விபத்து குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாக்கியலட்சுமி ஜெனி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மயூவின் பிறந்தநாளுக்காக 100 பேருக்கு சமைக்க சொல்லி பாக்கியாவிடம் ராதிகா ஆர்டர் கொடுத்திருந்தார். பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து குழந்தைகளுமே மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாரதி & கண்ணம்மாவை சேர்த்து வைக்கும் ஷர்மிளா, மகிழ்ச்சியில் சௌந்தர்யா – சீரியலில் அடுத்த திருப்பம்!
இதனால் பாக்கியாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கூட்டி செல்கின்றனர். ஆர்டர் கொடுத்ததிற்காக ராதிகாவையும் விசாரிக்க வேண்டும் என்பதால் ராதிகாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். பாக்கியாவை எப்படியாவது காவல் நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவருமே கோபிக்கு கால் செய்கின்றனர். ஆனால், கோபி எவரின் காலையும் அட்டென்ட் செய்யவில்லை. பின்பு செழியன் தான் பாக்கியாவை காப்பாற்ற வக்கீலிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது ராதிகாவை காப்பாற்ற கோபி காவல் நிலையத்திற்கு வருவார்.
பாக்கியா மிகப் பெரிய சிக்கலில் தவித்து கொண்டிருக்கும் போதும் காதலிக்காக தான் ஏங்கி கொண்டிருக்கிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வந்த திவ்யா கணேஷ் அவருக்கு சமீபத்தில் நடந்த விபத்து பற்றி கூறியுள்ளார். கடவுள் புண்ணியத்தால் தான் உயிர் பிழைத்து வந்தோம் என கூறுகிறார். தற்போது நான் நலமாக தான் இருக்கிறேன் எனவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜெனி விபத்தில் சிக்கிய செய்தி கேட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.