ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்காக வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – மெகா சங்கமம் ப்ரோமோ ரிலீஸ்!
இந்த வாரம் ராமமூர்த்தி தாத்தாவுக்கு குடும்பத்தினர்கள் பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். இந்த கொண்டாட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் இணையவுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் செயற்கை முறையில் சிகிச்சை எடுத்தாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என குடும்பத்தினர்கள் முடிவெடுக்கின்றனர். முல்லைக்கு கடந்த வாரத்திலிருந்து செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சையும் தொடங்கியது. இந்த சிகிச்சைக்காக மட்டுமே குடும்பத்தினர்கள் 5 லட்சம் வரை செலவு செய்தனர். அதாவது தெரிந்தவர்கள் அனைவரிடமும் கொஞ்சம் கொஞ்சமாக கடன் வாங்கி தான் சிகிச்சையை நடத்தினர்.
தனது மகனுடன் முதல் ரம்ஜானை கொண்டாடிய ஆலியா & சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!
மேலும், தற்போதைக்கு வீடு கட்டும் பிளானையும் நிறுத்தி வைத்துள்ளனர். ஆரம்பத்தில் அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை முல்லைக்காக மட்டும் விட்டுக் கொடுக்க முடியாது என மீனா சண்டை போட்டு வந்தார். கண்டிப்பாக இந்த சிகிச்சை வெற்றியை கொடுக்கும் என்பது சந்தேகமே என ஏற்கனவே மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். ஒருவேளை செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்து விட்டால் மீண்டும் ஐந்து லட்சம் கட்டி சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதனால் எப்படியாவது சிகிச்சை வெற்றி பெற்றுவிட வேண்டும் என குடும்பத்தினர்கள் நினைத்தனர்.
Exams Daily Mobile App Download
ஆனால், முல்லைக்கு இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்துவிட்டது. இதனால் முல்லை மிகவும் மனஅழுத்தத்தில் இருந்தார். இந்நிலையில், பாக்கியா தனத்திற்கு கால் செய்து தாத்தாவிற்கு 75 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறோம். அனைவரும் வாருங்கள் என பாக்கியா கூறுகிறார். வெளியூர் எங்காவது சென்றால் முல்லை கொஞ்சம் நிம்மதியாக இருப்பார் என நினைத்து தனம் சரி என்று சொல்கிறார். இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் மகா சங்கமம் நடைபெற இருக்கிறது.