ராதிகாவுடன் சேர்ந்து ஏமாற்றும் கோபி, எழிலிடம் சொல்லி வருத்தப்படும் பாக்கியா – அடுத்து வரப்போகும் எபிசோட்!
“பாக்கியலட்சுமி” சீரியலில், இன்றைய எபிசோடில் 3 மணி நேரம் சிறப்பு தொகுப்பு ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் கோபி மீது பாக்கியாவிற்கு சிறிய சந்தேகம் வந்துள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது. இன்று பாக்கியலட்சுமி தொழிலில் முன்னேறி தற்போது தனியாக ஒரு அலுவலகம் தொடங்கி இருக்கிறார். அவரது அலுவலகத்திற்கு விஐபி வருவார் என எழில் உறுதியாக சொல்ல பிரியாராமன் மற்றும் ரஞ்சித்தை அழைக்கிறார். அவர்களும் வருவேன் என உறுதியாக சொல்கிறார்கள். மறுபக்கம் பாக்கியாவை ஏமாற்றிவிட்டு கோபி ராதிகாவை பார்க்க செல்கிறார். வீட்டில் பெங்களூரு செல்வதாக சொல்லிவிட்டு செல்கிறார்.
Vijay TV Bigg Boss 5 Promo | நாமினேஷனுக்கு பயப்படும் போட்டியாளர்கள், விவாதத்திற்கு தயாரான கமல்ஹாசன்!
பாக்கியா ராதிகாவை பார்க்க செல்ல, அங்கே மயூராவும் ராதிகாவின் அம்மாவும் மட்டும் இருக்கின்றனர். ராதிகாவுக்கு முடியவில்லை என சொல்ல, மருத்துவமனைக்கு பாக்கியா செல்கிறார். அங்கே ராதிகாவை பார்த்துவிட்டு வெளியே வர, கோபியை பாக்கியா பார்க்கிறார். அப்போது நீங்க பெங்களூரு போகலையா என கேட்க என் நண்பருக்கு உடம்பு சரி இல்லை. அதனால் தான் நான் விமானத்தில் வந்தேன் என கோபி பொய் சொல்கிறார். செல்வி சார் சொல்வது சரி இல்லை ஏதோ தப்பாக இருக்கிறது என சந்தேகப்பட, பாக்கியா செல்வியை முறைக்கிறார். வெளியே வந்து செல்வி ஆட்டோ பிடிக்க செல்ல, பாக்கியா கோபியின் காரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
மீண்டும் இணைந்த “பாரதி கண்ணம்மா” சீரியல் அகில், அஞ்சலி – வைரலான மியூசிக் ஆல்பம்!
செல்வி வந்து பார்த்துவிட்டு சார் பொய் சொல்லி இருக்கிறார் என சொல்ல, பாக்கியா என்ன நடந்தது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். வீட்டிற்கு வந்து சோகமாக இருக்க, கோபி வருகிறார். உனக்காக தான் சீக்கிரம் வந்தேன் என கோபி சொல்ல, பாக்கியா சந்தேகத்துடன் பார்க்கிறார். எழில் என்னாச்சு அம்மா என கேட்க அப்பா என்னிடம் ஏதோ மறைக்கிறார் என வருத்தமாக சொல்கிறார். எழில் அந்த பழைய லேடியிடம் பழகுவது அம்மாவிற்கு தெரிந்து விட்டதா என எழில் சந்தேகப்படுகிறார். மேலும் கோபி ராதிகாவின் அலுவலகத்திற்கு ரஞ்சித் பிரியா ராமனை அழைத்ததால் அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கு போவார்கள் என்பதே இந்த சிறப்பு தொகுப்பில் காட்டப்பட்டுள்ளது.