பக்கவாதத்தில் முடங்கிய தாத்தா, ராதிகா விஷயத்தில் சிக்குவாரா கோபி? பாக்கியலட்சுமி அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. கோபி ராதிகாவை திருமணம் செய்ய இருப்பதாக மயூரா தாத்தாவிடம் சொல்ல, அதை கேட்டு அவர் கோவத்தில் இருக்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் திருப்பங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் சில அதிரடி திருப்பங்கள் நடைபெற இருக்கிறது. அதில் மயூரா பாக்கியாவின் வீட்டிற்கு வர தாத்தாவிடம் பேசுகிறார். அப்போது உங்க அம்மா எப்படி இருக்கிறார் என கேட்க நன்றாக இருக்கிறார். ஆனால் என் பாட்டிக்கும் அம்மாவிற்கும் அடிக்கடி சண்டை வரும் என சொல்கிறார். என்ன காரணம் என கேட்க எங்க வீட்டிற்கு கோபி அங்கிள் வருவார் அவரை என் பாட்டிக்கு பிடிக்காது என சொல்கிறார். அந்த அங்கிள் தான் என் அம்மாவை திருமணம் செய்ய போகிறார் என சொல்கிறார்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!
அதை கேட்டு ராமமூர்த்தி வருத்தப்பட, இதை வீட்டில் சொன்னால் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என நினைத்து கவலைப்படுகிறார். இந்நிலையில் ராமமூர்த்திக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகிறது. எல்லாரும் மருத்துவமனைக்கு அழைக்க வரவில்லை என சொல்கிறார். அதனால் ராமமூர்த்தியை நினைத்து கவலையுடன் இருக்க, கோபி அதை கொண்டுகொள்ளாமல் இருக்கிறார். ராமமூர்த்தி கோபியிடம் பேச போக, கோபி தைரியம் இருந்தால் சொல்லு என சொல்கிறார்.
கோலாகலமாக தொடங்கிய தமிழ், சரஸ்வதி திருமணம் – பரபரப்பான ப்ரோமோ ரிலீஸ்!
ராமமூர்த்தி கோபத்துடன் கிளம்ப அவருக்கு படிக்கட்டில் கால் நடக்க முடியாமல் போகிறது. அதனால் கால் தவறி கீழே விழுந்து தலையில் அடிபடுகிறது. உடனே குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்க்க, இனிமேல் அவரால் பேச முடியாது என டாக்டர் சொல்கிறார். அதை கேட்டு குடும்பமே வருத்தப்பட, கோபி இனிமேல் தன்னை பற்றி சொல்ல ஆள் இல்லை என நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார். அதனால் கோபி ராதிகா திருமணத்திற்கு இனிமேல் எந்த தடையும் இருக்க போவது இல்லை என தெரிகிறது.