பாக்கியவிடம் அனைத்து உண்மைகளை கூறும் ராதிகா, அதிர்ந்து போகும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனி வருபவை!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல வித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது, பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் இனி வரும் நாட்களில் கோபியே ராதிகா வீட்டிற்கு சென்று அனைத்து உண்மைகளையும் உளற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
தமிழ் ரசிகர்களுக்கு எப்போதுமே திரைப்படங்களை விட சீரியல்கள் தான் மிகவும் பிடித்தம். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களை மக்களுக்கு பிடித்த விதத்தில் தான் இருக்கும். அப்படி அனைவரும் எதிர்பார்ப்போடு பார்க்கும் சீரியல் தான், பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இதில் தற்போது ராதிகா மற்றும் பாக்கியாயை சமாளிக்க முடியாமல் கோபி தடுமாறுகிறார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் கோபியின் தந்தை ராமமூர்த்தியின் பிறந்தநாள் விழாவிற்கு வருகின்றனர்.
கஷ்டத்தில் இருக்கும் பலரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி தேற்றி வருகிறது – வெங்கடேஷ் பட் நெகிழ்ச்சி!
அவர்கள் கோபியின் நடவடிக்கையால் சந்தேகப்பட்டு அவரை கண்காணிக்கின்றனர். இதனால் அவரை பற்றிய உண்மைகள் தனம் மற்றும் மூர்த்தி இருவருக்கும் தெரிய வருகிறது. அவர்கள் இதனை ராதிகாவுக்கு தெரியவும் படுத்துகின்றனர். இதனால் அவர் கோபியை நினைத்து குழப்பம் அடைகின்றனர். அதனை பற்றி கோபியிடம் நேரடியாக கேட்கிறார். அது மட்டுமில்லாமல் அவரை வீட்டை விட்டும் வெளியேற்றுகிறார். இதனால் கோபம் அடையும் கோபி நன்றாக குடித்து விட்டு ராதிகா வீட்டிற்கு செல்லுகிறார். போதையில் அனைத்தையும் உளறவும் செய்கிறார். அனைத்து உண்மைகளையும் கோபியின் மூலமாக தெரிந்து கொள்ளும் ராதிகா அதிர்ச்சி அடைந்து விடுகிறார்.
Exams Daily Mobile App Download
இதனால் அடுத்து கதையில் நடவிருக்கும் திருப்பம் குறித்து அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர். இதன்படி, அடுத்ததாக ராதிகா அனைத்து உண்மைகளையும் பாக்கியவிடம் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரையும் கோபி ஏமாற்றி இருப்பதை பற்றி கூறி விட்டு போலீஸ் சென்று கம்பளைண்ட் செய்ய நினைக்கிறார். இனி வரும் நாட்களில் இது போன்ற காட்சிகள் தான் இடம் பெறும் என்று தெரிகிறது.