கோபி பாக்கியாவின் கணவர் என்பதை அறிந்து கொள்ளும் ராதிகா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
இத்தனை நாட்களாக ராதிகாவையும், பாக்கியாவையும் ஒரே நேரத்தில் கோபி ஏமாற்றி கொண்டிருக்கிறார். ஆனால், தற்போது பாக்கியாவின் கணவர் தான் கோபி என்பதை ராதிகா அறிந்து கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது தான் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரிடமும் கையும் களவுமாக பிடிபட போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதாவது ராதிகாவை தான் கோபி திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பதை மூர்த்தியும் தனமும் தெரிந்து கொள்கிறார்கள். நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகின்ற நபர் நல்லவர் கிடையாது. உங்களையும் உங்களது குடும்பத்தினரையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார். நீங்கள் அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை பார்த்த பிறகு எதுவாக இருந்தாலும் முடிவு செய்யுங்கள் என கூறி விட்டு கிளம்புகிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷினியா இது? வைரலாகும் புகைப்படங்கள்! வியக்கும் ரசிகர்கள்!
மூர்த்தி கிளம்பியதும் ராதிகாவிற்கு சந்தேகம் வருகிறது. உடனடியாக கோபியை வீட்டிற்கு வரும்படி கோபிக்கு கால் செய்கிறார். கோபி வந்ததும் இப்போதே உங்களது வீட்டிற்கு கூட்டி செல்லுங்கள் நான் உங்களது குடும்பத்தை பார்த்தே தீர வேண்டும் என கூறுகிறார். ராதிகா இப்படி கேட்டதும் கோபி நடுங்கி போகிறார். வீட்டிற்கு கூட்டி சென்றால் அனைத்து உண்மைகளும் தெரிந்து விடுமே என பதட்டபடுகிறார். பின்பு ராதிகாவிடம் வீட்டிற்கெல்லாம் கூட்டி செல்ல முடியாது என கோபி கோவமாக கூறுகிறார். நீ சாதாரணமாக வீட்டிற்கு கூட்டி செல்லுங்கள் என கேட்டிருந்தால் கூட கண்டிப்பாக கூட்டி சென்றிருப்பேன்.
Exams Daily Mobile App Download
ஆனால், வேறு ஒருவரின் பேச்சை கேட்டு தானே இப்படி எல்லாம் செய்கிறாய் என ராதிகாவிடம் கேட்கிறார். நீங்கள் உங்களது வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை என்றால் இப்போதே வீட்டை விட்டு வெளியே கிளம்புங்கள் என கூறுகிறார். இதற்கு பின்பு பாக்கியாவிடம் கோபியின் புகைப்படத்தை ராதிகா காட்டுவது போலவும், பாக்கியா இது என் கணவர் என கூறுவது போலவும் கோபியும் நம்மை ஏமாற்றி விட்டாரா என ராதிகா கோவப்படும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.