இனியாவிடம் வசமாக சிக்கிய கோபி, குடும்பத்திற்கு உண்மை தெரிய வருமா? “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கோபி பற்றி உண்மை யாருக்கும் தெரியாமல் இருக்க, இந்நிலையில் இனியா, கோபி மற்றும் ராதிகாவை ஒன்றாக பார்த்து உண்மையை தெரிந்து கொள்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கோபி இத்தனை நாட்களாக குடும்பத்தை ஏமாற்றி வந்த நிலையில் தற்போது அவர் மீது சந்தேகம் வர தொடங்கி இருக்கிறது. பாக்கியாவிற்கு கோபி மீது சந்தேகம் இருந்தாலும் அவரை கண்மூடித்தனமாக நம்புகிறார். எழில் கோபியை விட்டுவிடு என பல முறை சொல்லியும் கோபி மீது அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். இதற்கிடையே ராதிகாவிடம் மூர்த்தி தனம் கோபி ஏமாற்றுவதாக சொல்லி இருக்கிறார்.
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
அதனால் மனம் வருத்தப்பட்ட ராதிகா கோபியிடம் உங்களுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என கோவமாக சொல்கிறார். கோபி குடும்பத்தை காட்டாமல் இனி தப்பிக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாக தெரிகிறது. கோபியிடம் எழில் பேசவில்லை, தாத்தா கோவமாக இருக்கிறார் என்பதை எல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு சிறிது சந்தேகம் வருகிறது. அதனால் கோபியின் நடவடிக்கைகளை அவர் கண்காணித்து கண்டித்தும் வருகிறார்.
Exams Daily Mobile App Download
இனியாவும் செழியனும் மட்டும் தான் கோபியை நம்புகின்றனர். ஏற்கனவே ஒருமுறை கோபி இனியாவிடம் அம்மாவை விட்டு சென்றுவிடுவேன் என சொல்ல, அப்போது இனியா நானும் உங்களுடன் வருவேன் என சொல்கிறார். அது விளையாட்டுக்கு என்பது போல் தான் இனியா எடுத்துக் கொண்டார். ஆனால் இப்போது ராதிகாவையும் கோபியையும் ஒன்றாக இனியா பார்த்துவிடுகிறார். இது பற்றி கோபியிடம் சொல்லி இனியா கதறி அழுகிறார். அதனால் கோபி வசமாக சிக்கி விட்டது போல உணர போகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது