விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சுமங்கலி பூஜை செய்யும் பாக்கியா!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தாத்தாவிற்கு உடம்பு சரியாக சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்கின்றனர். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்த விஷயம் தாத்தாவிற்கு தெரியவருகிறது. அதனால் தாத்தா கோவப்பட்டு இருக்க இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரிந்தால் என்ன ஆகும் என நினைத்து வருத்தப்படுகிறார். கோபி ஆபிசில் இருந்து வீட்டிற்கு வர தாத்தா அவரிடம் சத்தம் போடுகிறார். எல்லாரிடமும் உண்மையை சொல்ல போறேன் என சொல்ல அப்போது தாத்தா மாடி படியில் தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டுவிடுகிறது.
மீண்டும் பாரதியுடன் குடும்பமாக இணைந்த கண்ணம்மா – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
அதனால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு பேச முடியாமல் போகிறது. அதனால் குடும்பமே தாத்தாவை நினைத்து வருத்தப்படுகிறார்கள். ஈஸ்வரி தாத்தா தன்னை இத்தனை ஆண்டுகளாக எவ்வளவு சந்தோஷமாக பார்த்துக் கொண்டார் என நினைத்து தினமும் சரியாக சாப்பிடாமல் இருக்கிறார். கோபி அப்பாவிற்கு தன்னால் தான் இப்படி நடந்துள்ளது என நினைத்து அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறார். ஈஸ்வரிக்கு பாக்கியா தான் ஆறுதலாக இருக்கிறார்.
தப்பிப்பிழைத்த `பாம்புபிடி’ மன்னன் வாவா சுரேஷ் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
இந்நிலையில் அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தாத்தாவை நினைத்து ஈஸ்வரி கவலையில் இருப்பதால் வீட்டில் சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்கின்றனர். அதில் ஈஸ்வரி பாட்டி தாலியில் தாத்தா குங்குமம் வைக்கிறார். பின் பாட்டியை பார்த்து சிரிக்கிறார். மறுபக்கம் மயூராவின் பிறந்தநாளுக்கு கோபி சென்றிருக்க அப்போது ராஜேஷ் வருகிறார். அதை பார்த்து மயூரா அதிர்ச்சி அடைய கோபி கோபப்படுகிறார்.