விவாகரத்து பெற கோர்ட் படியேறிய கோபி, பாக்கியா – பந்தம் தொடருமா? அதிரடி திருப்பங்களுடன் சீரியல்!
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவை திருமணம் செய்ய துணிந்த கோபி, பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடுகிறார். இதனால் வரப்போகும் காட்சிகள் குறித்து அதிரடி திருப்பங்கள் குறித்து அதிக ஆர்வம் எழுந்துள்ளது.
விவாகரத்து கேட்கும் கோபி:
விஜய் டிவியில் மாலை நேரத்தில் முதலில் ஒளிபரப்பாக தொடங்கிய பாக்கியலட்சுமி சீரியல், நாளடைவில் அதன் ரசிகர்களை அதிக அளவில் சேர்க்க தொடங்கியது. இதனால் இரவின் ப்ரைம் நேரத்தில் மற்ற சீரியல்களை ஓரம் தள்ளி பாக்கியலட்சுமி ஒளிபரப்பாக தொடங்கியது. ஒரு குடும்பத்தலைவியின் பரிதாப நிலையை அப்படியே காட்டுவதால் அதிக அளவில் பெண் ரசிகர்களை பெற்ற தொடராக ஆனது. தற்போது ஒரு முக்கிய திருப்பம் சீரியலில் வர உள்ளது.
ராதிகாவின் கணவர் ராஜேஷுடன் விவாகரத்து பெற்று விட்ட ராதிகா, கோபியையும் விவாகரத்து பெற வலியுறுத்துகிறார். ஆனால் கோபி இது பற்றி வீட்டில் எதுவும் பேசாமல் இருக்கிறார். தன் குழந்தைகளை விட்டு பிரிய மனம் இல்லாமல் தவிக்கிறார். ராதிகாவின் அம்மாவும் கோபியிடம் விவாகரத்து விஷயமாக அடிக்கடி பேசி வருகிறார். இதனால் மிகவும் யோசிக்கும் கோபி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு விவாகரத்து பற்றி பேச தொடங்குவார்.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் சிவகாமி சபதம் – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
இதனை சற்றும் எதிர்பார்க்காத அவரது குடும்பத்திற்கு இது பேரிடியாக இருக்கும். மேலும், பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பெற பாக்கியாவின் மேல் வீண் பலிகளை சுமத்தி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்கிறார். இவர்களின் விவாகரத்து விஷயத்திற்கு பிறகு இனியாவின் பள்ளியில் அனைவரும் இதனை பற்றி கேட்பது போலவும், காட்சிகள் வர உள்ளது. கோபியின் விவாகரத்து முடிவு பற்றி கேட்ட பின்னர் தான் பாக்கியாவின் நிலை என்ன என்பது தெரியவரும் என்பதால் ஆர்வம் அதிகரித்திருப்பது உண்மைதான்.