‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்கொலை செய்து கொண்ட இனியாவின் தோழி – சமூக பிரச்சனையை கையிலெடுத்த குழு!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கதையை மட்டும் மையமாக கொண்ட எபிசோட் இல்லாமல் சில சமூக கருத்துக்களை கதையுடன் சேர்ந்து கொண்டு வருவதால் சீரியலுக்கு ஏகப்பட்ட பாராட்டுகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் குடும்ப சீரியல். இந்த சீரியலில் படிக்காத பெண்ணான பாக்கியாவை மையப்படுத்தி கதை கொண்டு செல்லப்படுகிறது. படிப்பறிவு, வெளி உலகம் தெரியாத பெண்ணான பாக்கியா தற்போது சொந்தமாக தொழில் தொடங்கி தன்னால் முடிந்த அளவு சிலருக்கு வேலை கொடுத்து வருகிறார். அவர் கணவர் குடும்பத்தை பார்க்காமல் தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இப்படி கதை இருந்தாலும் இடைஇடையே சில சமூக விழிப்புணர்வு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பாக்கியாவை வங்கி ஊழியர் போல பேசி ஏடிஎம் கார்ட் விவரங்களை வாங்கியது. பின் எழில் அதை மீட்டு கொடுத்தது. பின் பாக்கியாவின் இரண்டாவது மகன் எழில் திருமணமாகி கணவனை இழந்த அமிர்தாவை காதலிப்பது அவரை மறுமணம் செய்து கொள்வது எல்லாம் சமூக அக்கறையுடன் இருக்கிறது. அதனால் சீரியலுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் வந்துள்ளது.
தற்போது கூடுதலாக பல இடங்களில் பள்ளி குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டு இருகின்றனர். அதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வரும் நோக்கில் பாக்கியாவின் கடைசி மகள் இனியாவின் தோழி நிகிலாவை ஆசிரியர் ஒருவர் தொந்தரவு செய்ய அதை நிகிதா இனியாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது தனது தோழிகள் 4 பேருடன் பிரின்சிபாலிடம் கம்ப்லைண்ட் செய்ய போகிறார் இனியா, ஆனால் இதை தெரிந்துகொண்ட அந்த ஆசிரியர் சின்ன பசங்களை பாஸ் ஆக்கமாட்டேன் என சொல்லி மிரட்டுகிறார்.
இதனால் இனியா மற்றும் தோழிகள் வருத்தமாக இருக்கின்றனர். மீண்டும் அந்த ஆசிரியர் நிகிலாவை தொல்லை செய்ய அவர் இனியாவிற்கு போன் செய்து எனக்கு சாகலாம் போல இருக்கிறது என சொல்லி போனை வைக்கிறார். மேலும் தற்போது வெளியான ப்ரோமோவில் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அந்த விஷயத்தை இனியா பாக்கியாவிடம் சொல்லி அழ அவர் என்ன செய்ய இருக்கிறார் என்பதே அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் காட்டப்படும். இப்படி சமூக கருத்துக்களை தயக்கம் இல்லாமல் கதையில் சேர்ப்பதால் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.