பாக்கியாவிடம் மாட்டிக்கொண்ட கோபி, ராதிகா? அடுத்து என்ன நடக்கும்! பாக்கியாவின் முடிவு என்ன!
கடந்த சில வாரங்களாக பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாக்கியலட்சுமி சீரியலில், அடுத்தது ராதிகா கோபியை கல்யாணம் பண்ண சம்மதிப்பார் என்கிற மாதிரி எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் அடுத்து நடக்க போகும் ட்விஸ்ட் என்ன என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
பாக்கியலட்சுமி ட்விஸ்ட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாக எதிர்பாராத திருப்பங்களுடன் கதைகளம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கோபி பாக்கியாவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்குகிறார். மற்றொரு பக்கம் வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியாவை திட்டி தீர்க்கின்றனர். இந்த சமயத்தில் எழில் மட்டும் பாக்கியாவுக்கு உறுதுணையாக இருக்கிறார். இதையடுத்து இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட பாக்கியா பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறார்.
ஒரு வழியாக இனியாவோட ஸ்கூல் பீஸ் ரெடி பன்னிட்டாங்க பாக்கியா. இதற்கு அப்புறம் பீஸ் கட்ட இனியாவோட ஸ்கூலுக்கு போறாங்க. அங்க ராதிகாவும்,கோபியும் கைய பிடிச்சு பேசிகிட்டு இருக்கிறத பாத்த பாக்கிய கோவமா ரெண்டு பேர்கிட்டயும் வந்து, ராதிகாவை பாத்து நான் உங்கள எவளோ நம்புனே ஆனா எனக்கு எப்படி ஒரு துரோகம் பண்ணிட்டிங்களே ராதிகா அப்டினு கோபமா கேள்வி கேக்குறாங்க பாக்கியா. ஸ்கூல்லயே இப்படி நின்னு கைய பிடிச்சு பேசுறிங்களே தனியா பேசும் போது எப்டிலாம் பேசுவீங்களோனு இரண்டு பேரையும் திட்டி விளாசுகிறார் பாக்கியா.
ஏற்கனவே கோபியோட அம்மா ராதிகா வீட்டுக்கே போய் ராதிகாவை கேவலமா பேசிட்டு வந்தாங்க. அப்பவே ரொம்ப கோபமா இருந்த ராதிகா இப்போ பாக்கியாவும் இப்படி நம்மள புரிஞ்சுக்காம பேசுறாங்களேன்னு என்ன முடிவு எடுப்பாங்ககிறது ட்விஸ்ட் ஆக இருக்கிறது. அதாவது, நம்ம நல்ல பிரெண்டு ஆ நெனச்ச டீச்சர் இப்படி நம்மள புரிஞ்சுக்காம பேசுறாங்களேன்னு ராதிகா கோபமாகி, நாம ஏன் கோபியை ஏத்துக்க கூடாது, யாருமே நாம சொல்றத புரிச்சுக்கிற மாட்டிக்கிறாங்க அப்புறம் ஏன் நாம கோபியை கல்யாணம் பண்ணிக்க கூடாது அப்டினு ராதிகா அடுத்த முடிவு எடுப்பாங்கனு எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்