கோவத்தில் இனியாவை அறையும் பாக்கியா, குடும்பத்தினர் அதிர்ச்சி – ப்ரோமோ ரிலீஸ்!
அப்பா வீட்டை விட்டு சென்றதற்கு நீங்கள் தான் காரணம் என இனியா பாக்கியாவை கண்டபடி பேசியதால் கோவத்தில் பாக்கியா இனியாவை அறையும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் மொத்த குடும்பமும் பாக்கியா மீது கொலை வெறியில் இருக்கின்றனர். ராமமூர்த்தி தாத்தா மற்றும் எழில் மட்டும் தான் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொண்டு பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால், கோபி வீட்டை விட்டு துரத்தி விட்டதை கூட நினைத்து கவலைப்படாமல் ராதிகாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்கிறார்.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகும் கோபி? அதிர்ச்சியில் ரசிகர்கள்! அவரே வெளியிட்ட வீடியோ!
என்ன தான் கோபியை ஏற்றுக்கொள்ளலாமா என ராதிகா தயங்கினாலும் முழு மனதோடு கோபியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், கோபி ராதிகாவை சென்று சந்திப்பதற்கு பாக்கியாவே காரணத்தை ஏற்படுத்தி கொடுத்துவிட்டதால் இனியா, செழியன், ஈஸ்வரி என அனைவருமே பாக்கியாவை திட்டுகின்றனர். இந்நிலையில், இனியாவும் பாக்கியாவிடம் வந்து எனக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என கூறுகிறார். இதோடு நிறுத்திக்கொள்ளாமல் இதுவே அப்பாவாக இருந்தால் கண்டிப்பாக சரியான நேரத்தில் ஸ்கூல் பீஸ் கட்டியிருப்பார் என கூறுகிறார்.
இது மட்டுமல்லாமல் நான் அப்பாவை மிகவும் மிஸ் செய்கிறேன். நம் குடும்பம் இப்படி கஷ்டப்படுவதற்கு நீங்கள் தான் காரணம் என பாக்கியாவை இனியா கண்டபடி பேசிவிடுகிறார். இதனால், இனியாவை பாக்கியா கோவத்தில் கன்னத்தில் அறைந்துவிடுகிறார். குடும்பத்தினர்கள் ஏன் என் நிலைமையை புரிந்துகொள்ள மாட்டேங்கிறார்கள் என பாக்கியா வருத்தப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதற்கு பிறகும் பாக்கியா இந்த திட்டுகளை வாங்கிக்கொண்டு அமைதியாக தான் இருக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்