கோபி மீது இருக்கும் சந்தேகத்தை நேரடியாக கேட்ட பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியல் நாளைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாகிவிட்டதால் பாக்கியாவிற்கு கோவம் வருகிறது. அதனால் இதுவரை கிடைத்த ஆதாரங்களை காட்டி கோபியிடம் பாக்கியா கேள்வி கேட்கிறார். இந்நிலையில் நாளைய எபிசோடு குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை பிரிந்து மிகவும் கஷ்டமாக இருப்பதால் கோபி பல முறை பாக்கியாவிடம் கோபப்படுகிறார். இதுவரை கோபி மீது பாக்கியாவிற்கு சந்தேகம் இருந்தாலும் அது பற்றி கோபியிடம் ஒரு முறை கூட கேள்வி கேட்கவில்லை. ராதிகாவுக்கு பாக்கியா தான் கோபியின் மனைவி என தெரிந்த பின் ராதிகா கோபியை வேண்டாம் என நினைக்கிறார். ஆனால் மயூராவை பார்க்காமல் இருக்க முடியாத கோபி மயூராவை தேடி அவருடைய ஸ்கூலிற்கு செல்கிறார்.
அதை பாக்கியாவிடம் வேலை செய்யும் பெண் ஒருவர் பார்த்துவிட அவர் பாக்கியாவிடம் சொல்லி விடுகிறார். அதனால் பாக்கியாவிற்கு சந்தேகம் மேலும் அதிகமாகி விடுகிறது. கோபி காரில் ஜாக்கெட் தைத்த பில் இருந்ததும், இரவெல்லாம் கோபி டார்லிங் என போன் பேசியதை கேட்டும், கூட அமைதியாக இருந்தார். ஆனால் இப்போது எல்லாம் எல்லை மீறி சென்று கொண்டிருப்பதை பார்த்து பாக்கியாவால் சும்மா இருக்க முடியவில்லை.
Exams Daily Mobile App Download
அதனால் அவர் கோபியிடம் கேள்வி கேட்கிறார். கோபி காரில் கிடைத்த ஜாக்கெட் பில்லை காண்பித்து இது உங்க காரில் இருந்தது. அது மட்டுமில்லாமல் நீங்க இரவெல்லாம் யாருடனோ போனில் பேசுறீங்க டார்லிங், செல்லம் என பேசியதை கேட்டேன். என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரிய வேண்டும் என பாக்கியா கோவமாக கோபியை பார்த்து கேக்கிறார். அதற்கு கோபியால் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். இது குறித்து ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.