கோபியை திருமணம் செய்துகொள்ள ரெடியாகும் ராதிகா – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!
ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் கோபி எப்படியோ யாரிடமும் மாட்டாமல் தப்பித்து விடுகிறார். இதற்கு பிறகு கோபியை திருமணம் செய்துகொள்ள ராதிகா அடுத்தகட்ட வேலையில் இறங்கியுள்ளது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்த நாள் விழாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் வந்திருக்கிறார்கள். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு ராதிகாவையும் பாக்கியா அழைத்திருக்கிறார். தனது வருங்கால கணவரையும், மயூவையும் கண்டிப்பாக அழைத்து வருகிறேன் என்று ராதிகா கூறியிருக்கிறார். ராதிகா பிறந்தநாள் விழாவில் கோபியை பார்த்து விட்டாலும் பிரச்சனை தான், கோபி பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாமல் போனாலும் பிரச்சனை தான்.
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!
இதனால் எப்படியாவது பிறந்தநாள் விழாவை தடுத்தே தீர வேண்டும் என கோபி முயற்சி செய்கிறார். இந்நிலையில், ராதிகாவின் எப்படியாவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளாமல் செய்வதற்கு தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் கண்டிப்பாக பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமா என ராதிகாவிடம் கோபி கேட்கிறார். ஆனால், ராதிகா நீங்கள் வீட்டிலேயே இருங்கள். நானும் மயூ மட்டும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கிறோம் என கூறுகிறார். கோபியின் அனைத்து பிளானையும் தாண்டி ராதிகாவும் மயூவும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
Exams Daily Mobile App Download
ராதிகா பார்த்துவிட கூடாது என்பதற்காக கோபி திருட்டுத் தனமாக வீட்டின் பின்பக்க கதவு வழியாக தப்பித்து ஓடுகிறார். இதற்கு அடுத்தபடியாக கோபியை விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற முயற்சியில் ராதிகா இறங்கியிருக்கிறார். திருமணத்திற்காக மாங்கல்யம் வாங்கி இந்த மாங்கல்யத்தை தான் நீங்கள் என் கழுத்தில் கட்ட வேண்டும் என ராதிகா கூறுகிறார். திருமணத்திற்கு என்னவெல்லாம் பிரச்சனை வர இருக்கிறதோ என கோபி முழிக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.