விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி!
பாக்கியாவிற்கு எப்போது அனைத்து உண்மைகளும் தெரியவரும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சமயத்தில் ராதிகாவை கோபி திருமணம் செய்துவிட்டபடியான செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தன்னை மட்டுமே உலகம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் பாக்கியாவின் கண்ணில் மண்ணை அள்ளி வாரி போட்டுவிட்டு கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். இரவு நேரங்களில் கூட பாக்கியா வீட்டிற்கு வருவதை கோபி குறைத்துக்கொண்டு முழுக்க முழுக்க ராதிகாவுடன் மட்டுமே நேரத்தை செலவிட்டு வருகிறார்.
தற்போது மயூவையும் ராதிகாவையும் கூட்டி கொண்டு பார்க் ஒன்றிற்கு கோபி செல்கிறார். அதே பார்க்கிற்கு தான் பாக்கியாவும் அவரது குடும்பத்துடன் சென்றுகிறார். அப்பா மட்டும் தான் தன்னுடன் இல்லை என இனியா மிகவும் வருத்தப்படுகிறார். அப்பாவும் கூட வந்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து பார்க்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் கோபிக்கு அனுப்புகிறார். இவர்களும் நாம் இருக்கும் பார்க்கில் தான் இருக்கிறார்களா என நினைத்து உடனே பார்க்கில் இருந்து வெளியேற கோபி முயற்சிக்கிறார்.
காரில் ஏறி செல்லும்போது கோபியை எழில் பார்த்துவிடுகிறார். அப்பா வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் தாத்தாவிடம் சொல்லி அழுகிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் திருமணத்தை தடபுடலாக கோபி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். இந்த திருமணத்திற்கு ராதிகா பாக்கியாவையும் அழைக்க இருக்கிறார். கோபியை தான் ராதிகா திருமணம் செய்துகொள்ள போகிறார் என்பது கூட அறியாமல் பாக்கியா திருமணத்தில் கலந்துகொள்கிறார். மணக்கோலத்தில் கோபியை பார்த்த பாக்கியாவின் நிலைமை என்னவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.