விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கோபி வெளியிட்ட பதிவு!
விஜய் டிவியில் மிகவு பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் குறித்து கோபி பதிவிட்டு உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகிய எபிசோடுகள் மற்றும் அதன் புரோமோக்களை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து ப்ளீஸ் கதையை மாற்றுங்கள் என கமெண்டில் கெஞ்சி வந்த நிலையில் தற்போது அதற்கேற்றவாறு கதையில் ராக்கெட் வேக ட்விஸ்ட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதாவது ரசிகர்களின் பல நாள் கனவு நிறைவேறும் விதமாக கோபியின் உண்மை முகம் பாக்கியாவுக்கு தெரிவது போன்று ப்ரோமோ வெளியாகி அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுக்க இருக்கிறார் சீரியல் இயக்குனர்.
‘பாண்டியன் ஸ்டார்ஸ்’ ஜீவாவை கலாய்த்த ரசிகர்கள் – காரணம் என்ன தெரியுமா? வைரலாகும் பதிவு!
அதாவது விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபியை ராதிகா வந்து நலம் விசாரிப்பதையும் அப்போது கோபி அவளது கைகளை பிடித்து பேசியதையும் கேட்ட பாக்கியா அவளது கணவன் கோபியின் உண்மை முகத்தை அறிந்துகொண்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்பதுபோல் இந்த வார எபிசோட்டின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும்? பாக்யாவின் முடிவு என்னவாக இருக்கும்? என பல கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் தற்போது கோபியாக நடித்துவரும் சதீஷ்குமார் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கோபி கதாபாத்திரத்தை குறித்ததான சில தகவல்களை பதிவிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்த சீரியலை பார்க்கும் பெரும்பாலான பெண்கள் கோபியை திட்டி தீர்க்கின்றனர். ஆனால், அதைப்பற்றி நான் இனி பேச மாட்டேன். பாக்கியா சந்தோஷமா இருந்தா மட்டும் போதுமா, கோபி சந்தோஷமா இருக்க வேண்டாமா? அவருக்கும் மனசு, ஆசை எல்லாம் இருக்கும்தானே! கோபிக்கு 23 வயசுல கல்யாணம் ஆச்சு, அந்த வயசுல தான் கோபியும் 3 குழந்தைகளை பெற்று இருக்கிறார். ஆனால், மனசுக்குள் ராதிகா மீதான காதல், 25 வருஷம் தூங்கிட்டு இருந்துச்சு. மறுபடியும் எதார்த்தமா அவளை சந்தித்த போது என்ன ஆகும்னு நினைச்சீங்களா?சும்மா பத்திக்கிட்டு எரியும் என்று மிகவும் ஆக்ரோஷமாக பேசியுள்ளார் நடிகர் சதீஷ்குமார்.